நல்லாட்சி அரசின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு கொழும்பு புறக்கோட்டை புடவை வியாபாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு காரணமாக இருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதிகளுக்கான மாபெரும் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று (13) கொழும்பு 13 சினிவேல்ட் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், தேசிய கலந்துறையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர். மனோ கணேசன். கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், சோ.ஸ்ரீரிதரன், திருமதி சரஸ்வதி சிவகுரு, எம்.உதயகுமார். மேல்மாகான சபை உறுப்பினர்களான ரீ.குருசாமி, சண் குகவரதன் ஆகியோர் கௌரவிக்கபட்டனர். நிகழ்வில் பெரும் திறலான வர்த்தகர்கள், தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கத்தினர் கலந்துக் கொண்டணர்.