பான் கி மூன் ஒரு முட்டாள்! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜனாதிபதி

279

 

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான ரோடிரிகோ டுட்டர்டே, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கடுமையாக திட்டிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கிடையே ஆசியான் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், அப்போது ஒபாமாவும், ரோடிரிகோவும் சந்தித்து பேசிக் கொண்டதாக தகவல்கள் வெளியானது.

இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரோடிரிகோ, ஒபாமாவை நான் நாய்க்கு பிறந்தவன் என்று சொல்லவே இல்லை என்று தெரிவித்தார்.

மேலும் ஐநா சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் ஒரு முட்டாள் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் போதைப்பொருள் கடத்தில் விவகாரம் தொடர்பாக மனித உரிமை மீறல் நடப்பதாக பான் கி மூன் அறிக்கை வெளிட்டார், அதில் சந்தேகத்தின் பேரில் கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நபர்கள் விசாரணை ஏதுமின்றி சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

SHARE