கெம்பல் மைதானத்தில் ஒன்று திரண்டுள்ள மக்கள்!

277

 

ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான வைபவம் இன்று நடைபெற்று கொண்டிருக்கின்றது.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கெம்பல் மைதானத்தில் வருட பூர்த்தி வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வைபவத்தில் விசேட அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.

சகல கட்சிகளினதும் தலைவர்கள், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ள கட்சிகளின் பிரதிநிதிகள், முன்னாள் பாராளுமன்ற, மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சகல தேர்தல் தொகுதிகளில் இருந்தும் சிரேஷ்ட அங்கத்தவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

 

மேலும், பெருந்திரலான கட்சி ஆதரவாளர்களும் இன்றைய கட்சியின் வருட பூர்த்தி வைபவத்தில் கலந்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, கெம்பல் மைதானத்தில் இடம்பெறும் ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருடப் பூர்த்தி வைபவத்தை முன்னிட்டு பொரள்ளை பகுதியில் வாகன நெரிசல் ஏற்படலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மாற்று பாதைகளை பயன்படுத்தி வாகன நெரிசலை தவிர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸ் தலைமையகம், வாகன சாரதிகளை கேட்டுள்ளது.

SHARE