மதுபோதையில் இருந்தவரிடம் கொள்ளையிட்ட மர்ம நபர்கள்: பொலிஸ் வலை வீச்சு

253

 

சுவிட்சர்லாந்து நாட்டில் மதுபோதையில் இருந்த நபரை தாக்கி கொள்ளையிட்ட இரண்டு மர்ம நபர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Kleinbasel என்ற நகரில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே பகுதியில் உள்ள ராணுவ குடியிருப்பிற்கு 55 வயதான நபர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளார்.

பின்னர், சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

ராணுவ குடியிருப்பிற்கு வெளியே உள்ள இருக்கையில் சில நபர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு மத்தியில் இந்த நபரும் அமர்ந்துள்ளார்.

சில நிமிடங்களுக்கு பிறகு அவர்கள் அங்கிருந்து எழுந்து சென்றவுடன் நபர் மட்டும் தனியாக அமர்ந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த இரண்டு பேர் இருக்கையில் அமர்ந்திருந்த நபரை பின்பக்கமாக இருந்து தள்ளிவிட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் நிலைக்குலைந்த நபர் நிலத்தில் விழுந்துள்ளார். பின்னர், நபரை மேலும் தாக்கிய இருவர் அவரிடம் இருந்து பர்ஸை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் புகார் பதிவுசெய்யப்பட்டதும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள

SHARE