புதிய நீர் இணைப்பினை பெற்றுக்கொள்ள புதிய திட்டம்!!

255

 

மன்னார் எழுத்தூர் நீர்த்தாங்கியிலிருந்து அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு உள்ளக குடி நீர் இணைப்புக்களை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் முன் னெடுக்கப்பட்ட உலர் வலய நகர நீர் மற்றும் சுகாதாரத்திட்டத்திற்கு அமைவாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்த்தாங்கியிலிருந்து குடி நீர் இணைப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக தாழ்வுபாடு, பட்டித்தோட்டம், கீரி, தாராபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளடங்களாக நீர் இணைப்பிணை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

எனவே புதிய நீர் இணைப்பினை பெற விரும்புவோர் தங்களது பகுதியிலுள்ள கிராம அலுவலகர் அல்லது மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையுடன் தொடர்பு கொண்டு இணைப்பினை பெற்றுக்கொள்ளுவதற்கான படிவங்களை பெற்று நீர் இணைப்பினை பெற்றுக்கொள்ளுமாறு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

 

 

SHARE