போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர்கைது

256

 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கிரான் பகுதியில் வைத்து போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால்கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  திப்புட்டுமுன  தெரிவித்தார்.

unnamed-1 unnamed-2 unnamed

போதைவஸ்து மாத்திரைகளை விற்பனை செய்யும் இளைஞர் ஒருவர் கல்முனைப் பிரதேசத்திலிருந்துமாத்திரைகளுடன் வாழைச்சேனைப் பிரதேசத்திற்கு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்தகவலையடுத்து குறித்த இளைஞரை கிரான் பிரதேசத்தில் வைத்து சோதனையிட்ட போது தான் பயணித்தமோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்த நிலையில் 170 Neurovan  150mg மாத்திரைகளும் 05mg கஞ்சாவும்கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் வாழைச்சேனை பிறைந்துரைச்சேனைச் பகுதியைச் சேர்ந்த 24 வயதுஇளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE