வவுனியாவில் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட 6 பேர் கைது –

239

 

வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டில் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 48.25 மற்றும் 46.60 கிராம் தங்க உருண்டைகள், 12 தங்க மோதிரங்களை சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கொள்ளையிட்ட தங்க ஆபரணங்களை குருணாகல் மற்றும் மன்னார் பிரதேசங்களில் அடகு வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

SHARE