பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நியூயோர்க் சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

250

maithripala_sirisena_

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நியூயோர்க் ஜோன் எவ் கெனடி விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளார்.

நியூயோர்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்கள், நியூயோர்க்கில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஆரம்பமாகும் ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரையாற்றுவதற்கு நாளை மறு தினம் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி உள்ளிட்டவர்களை அவர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE