திருகோணமலை நகர சபைக்கு முன்னால் கண்டனப் போராட்டம்.

259

திருகோணமலை நகர சபைக்கு முன்னால் கண்டனப் போராட்டம் இன்று (19.09.2016) காலை 10.00 மணிக்கு தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 10 வருடகாலமாக இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தின் வசமிருந்த திருகோணமலை நகரசபைக்கு சொந்தமான “மலைஅருவி” எனப்படும் திருகோணமலை ஐக்கிய பொதுச் சந்தை கடந்த மாதம் 16 ஆம் திகதி இராணுவத்தினரால் நகரசபை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த பகுதியை வேறு தேவைகளுக்காக நகர சபையிடம் இருந்து அபகரிக்கும் நடவடிக்கைகள் பலரால் முன்னெடுக்கப்பட்டு வருவதை கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90

குறித்த பகுதியில் சந்தைத் தொகுதியினை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் நகரசபையினால் முன்னெடுக்கப்பட வேண்டும், சந்தையைத் தவிர வேறுவிதமான தேவைகளுக்கு நகரசபை குறித்த பகுதியினை வளங்கக் கூடாது எனும் கோரிக்கைகளை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களிடம் கையழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE