வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் (25.09.2016) காலை 8.00 – 10.30 வரை பாடசாலை அதிபர் T.அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் சிரமதானப் பணிகள் இடம்பெற்றது. பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நகரசபையின் ஊழியர்கள், பாதுகாப்புப் பிரிவினர் என ஏராளமானோர் இச் சிரமதானப் பணியில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தகவலும் படங்களும்:- அலுவலக செய்தியாளர் (தினப்புயல் பத்திரிகை)