இனவாதத்தை தூண்டும் அரசியல்வாதிகளுக்கான புதிய சூத்திரம் அறிமுகம் – V2 பிளஸ் U = 0

270

 

vicki 2இனவாதத்தை பரப்ப முயற்சிக்கும் மூன்று அரசியல்வாதிகள் குறித்து ஒரு கணித சூத்திரத்தையே உருவாக்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

images

இந்த மூன்று அரசியல் வாதிகளையும் இணைத்து புதிய சூத்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதாவது V2 பிளஸ் U = 0 ஆக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதில் V2 என்ற குறியீட்டின் மூலம் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் வாசுதேவ நாணயக்காரவை குறிக்கின்றது. U என்ற எழுத்து உதய கம்மன்பிலவை குறிக்கும் என்று நலின் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவின் உறவினரான வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனினால் கடந்த வாரம் யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியினால் பல கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதாக நலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடக்கின் முதலமைச்சராகி கொழும்பில் இருக்கும் விக்னேஸ்வரன் இரவு நேரங்களில் வாசுதேவவுடன் ஒன்றாக கோப்பி அருந்திக் கொண்டு இனவாத சதி செய்வதாகவும் நலின் பண்டார குற்றம் சுமத்தினார்.

அத்துடன் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இனவாதத்தை பரப்புபவர்களே நாணயக்கார மற்றும் விக்னேஸ்வரன் என நலின் பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.

SHARE