விக்கினேஸ்வரன் கேட்பது சமஷ்டி. வடகிழக்கு இணைப்பு.
“தமிழர்கள் ஒரு தேசிய இனம்” தேசிய இனம் முன்வைக்கின்றதை தேசிய ரீதியாக கணிக்கப்படவேண்டும். அதை இனவாதமென்றோ, பிரிவினைவாதமென்றோ அல்லது தனி நாட்டுக்கு இட்டுச்செல்வதென்றோ கூறுவது தவறான அரசியல் கண்ணோட்டமாகும்
இலங்கையில் சமஷ்டியையும், வடகிழக்கு இணைப்பையும் கேட்டு நின்றவர்கள் சிங்களவர்களாகும். 1926 ஆம் ஆண்டு தொடக்கம் கேட்பவர்கள். கண்டிய சிங்களவர்கள் சோல்பரி அரசியல் அமைப்பு வரையும் கேட்டார்கள் அப்பொழுது ஒரு சிங்கள தலைவர்களும் அதனை ஒரு இனவாதமென்றோ அல்லது தனி நாட்டுக் கோரிக்கை என்றோ ஒருபோதும் கூறவில்லை.
ஒஸ்லோ பிரகடனத்தை புலிகளும் இராஜபக்ச அரசாங்கமும் ஏற்று கையெழுத்திட்டனர். அப்பிரகடனத்தின் பிரகாரம் வடகிழக்கு இணைப்பு சமஷ்டி அரசியல் உள்ளக சுயநிர்ணய உரிமை போன்றவைகள் வழங்கப்பட்டிருந்தன. அப்பொழுது தெற்கிலிருந்து இனவாதமென்றோ, தனிநாடென்றோ எவரும் குரலெழுப்பவில்லை.
எதிர்க் கட்சித் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் அடிக்கடி சமஷ்டி, வடகிழக்கு இணைப்பு என்பவற்றை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று உரைக்கின்றார்.
“ஒஸ்லோ பிரகடனத்தில் கையொப்பமிட்ட நிமல் சிறி டீ பால சில்வா அதை மறந்து இன்று ஓலமிடுகின்றார்”
இராஜதந்திர அணுகுமுறைப்படி பெறுவோம் என்றும் இரா சம்பந்தன் கூறுகின்றார். விக்கினேசுவரன் கூறுவது இனவாதமென்றால்,
தனி நாடென்றால் சம்பந்தன் கூறுவது எந்த வகையில் சேரும் என்பதை தெற்கின் தலைவர்கள் கூறாது மெளனம் காக்கின்றார்கள் ஏன்? ” அரசியல் நாடகமா? ”