மாவட்டத்தில் முதலிடத்தில் மூன்று மாணவர்களுடன் விசுவநாதர் ஆரம்ப பாடசாலையில் 34 பேர் சித்தி!
முல்லைத்தீவு விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மூவர் 182 புள்ளிகளை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாமிடத்தையும் 181 புள்ளியை பெற்று 04ம் இடத்தையும் பெற்றுக்கொண்டதோடு 34 பேர் சித்தியடைந்துள்ளனர்.
இந்த பாடசாலை கடந்த 6வருடங்களாக மாவட்டத்தில் அதிகூடிய மாணவர்களை சித்தியடைய செய்து முதல் நிலையை தக்க வைக்கும் பாடசாலை என்பது சிறப்புக்குரிய விடயமாகும்.
முதலாமிடம் மாவட்ட ரீதியில் …
*செல்வன் மு.அபிஷங்கர் 182
*செல்வன் மு.தேனகன் 182
*செல்வன் ச .புகழ் வேந்தன் 182
மேலும் இப்பாடசாலையில் 80 பேர் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 34 பேர் சித்தியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது .