ஜெயலலிதாவை மர்ம நபர் யார்.? : காரணம் வெளியாகியது.!

261

 

தமிழக முதல்வர் ஜெயலலிதா இரண்டு வாரங்களுக்கு மேலாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில்; உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பூங்கொத்து அனுப்பி வைத்து விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி அவரை இன்னமும் நேரில் சென்று நலம் விசாரிக்கவில்லை.

ஒரு மாநில முதல்வர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதாவின் நல்ல நண்பரும் கூட. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூட அப்பல்லோ வந்து முதல்வரின் நலம் விசாரித்தார். ஆனால் பிரதமர் மோடி இன்னமும் வராதது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி தமிழகம் வராததற்கு காரணம் காவிரி விவகாரம் தான் பேசப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என கர்நாடகா பா.ஜ.க நிர்பந்தம் காரணமாக தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசு நடந்து கொண்டதால் தமிழக அரசும் தமிழக மக்களும் பிரதமர் மோடி மீது வெறுப்பில் இருக்கின்றனர்.

இதன் காரணமாகவே பிரதமர் மோடி சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதை தவிர்த்து வருவதாக அவரது வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதேவேளை, நேற்று வெளியான ஒரு புலனாய்வு வார இதழில் முதல்வரின் உடல்நிலை பற்றி அறிவதற்காக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில்;; இருந்து வந்த மருத்துவர்களுடன் பிரதமரின் உளவுப் பிரிவு அதிகாரியும் வந்து முதல்வரைப் பார்த்துச்சென்றார் என்று குறித்த இதழில் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE