நாட்டை பிளவுபடுத்துவதற்கோ, அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை மாற்றுவதற்கோ தான் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை மனசாட்சியுடன் மக்களுக்காக நிறைவேற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.