இதன் விளைவாக ஏற்பட்ட பாதிப்பில் முதல் ஏழு மாதங்களிலேயே 186 ஊழியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தினரின் அழுத்தத்தாலும், பலர் பாதுகாப்பு குறித்த பயத்தினாலும் ராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பேரழிவுகளுக்குப் பிறகு பல ஊழியர்களும் பறப்பதற்கு பயப்படுகின்றனர் என்று ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளரான அப்துல் மலேக் அரிப் குறிப்பிட்டார். இதனால் எஞ்சியுள்ள ஊழியர்கள் ஒரு நாளைக்குப் பனிரெண்டு மணி நேரத்திற்கும் மேல் பணி புரிய வேண்டியுள்ளது என்பதையும் அவர் கூறினார்.
தற்போது ஊழியர்களின் ராஜினாமா குறைந்துள்ளதாகக் குறிப்பிடும் ஏர்லைன்ஸ் நிறுவனம் அவர்களுக்குத் தேவையான உணர்ச்சி மற்றும் உளவியல்பூர்வ ஆதரவையும் அளித்துவருவதாகத் தெரிவிக்கின்றது. இதுதவிர தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாக நஷ்டக் கணக்கையே காட்டிவந்த இந்நிறுவனம் தனியார் நிதி நிறுவனமான கசானா நேசனலால் ஏற்கப்பட்டு பெரும் சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள இருக்கின்றது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.