சற்று நேரத்திற்கு முன்னர் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

350

 

சற்று நேரத்திற்கு முன்னர் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான சேவைகள் அமைச்சின் கீழ் வரவேண்டிய சில விடயங்களை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் இயங்கும் துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சின் கீழ் இணைத்து வர்த்தமானியில் உள்ளடக்கியுள்ளமையே இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

அதே வேளை அமைச்சருக்கான வர்த்தமானியில் மத்தல விமானநிலையம் மாத்திரம் உள்ளடக்கியிருந்ததனால் மனவேதனைக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் சட்டத்தரணியாக முழுநேரம் செயற்பட வேண்டும் என்பதற்காகவே அவர் அமைச்சுப் பதவியில் இருந்து விலகியதாக பைசர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.

SHARE