விஜய்யின் கத்தி தீபாவளிக்கு கண்டிப்பாக திரைக்கு வருகிறது என்று அந்த படநிறுவனத்திடமிருந்தே உறுதியான தகவல்கள் வெளியான பிறகும்கூட, ஒருவேளை வராமலும போகலாம் என்றொரு வதந்தி கோடம்பாக்கத்தில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே, சமீபத்தில் சென்சாருக்கும் படத்தை அனுப்பி யு சான்றிதழும் வாங்கி விட்டனர். ஆனபோதும், இன்னமும் படப்பிடிபபு நடப்பதாகவும், பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் கத்தி வட்டாரத்தகவல் தெரிவிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கத்தி ஆடியோ விழாவுக்கு பிறகு அமைதி காத்து வந்த...
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ப்ரியங்கா சோப்ரா, சல்மான் கான், ஷாரூக்கான், அமீர்கான், சைப் அலிகான் உள்ளிட்ட பலருடன் ஜோடி போட்டு விட்டார். இந்நிலையில், சைப் அலிகானும், ப்ரியங்கா சோப்ராவும் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபுதேவா அடுத்து இயக்க இருக்கும் படத்தில் ப்ரியங்கா சோப்ராவும், சைப் அலிகானும் ஜோடி சேர இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ரேஸ்-2, காக்டாயில் போன்ற படங்களில் சைப்புடன் நடிக்க ப்ரியங்காவுக்கு அழைப்பு...
சினிமாவுக்கு வந்து குறுகிய காலத்திலேயே பரபரப்பான நடிகையாகி விட்டார் ஸ்ருதிஹாசன். இதற்கு காரணம் படத்துக்குப்படம் அவர் காண்பித்து நடித்த கிளாமர்தான். அதன்காரணமாக அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிய ஸ்ருதிஹாசன், தமிழைப் பொறுத்தவரை அடக்கியே வாசித்து வருகிறார். 3, ஏழாம் அறிவு படங்களைத் தொடர்ந்து இப்போது விஷாலுடன் நடித்துள்ள பூஜையிலும் பெரிய அளவில் அவர் வெடித்து சிதறவில்லை என்றே கூறப்படுகிறது. அதனால் இந்தி, தெலுங்கு படங்களில் வாரி வழங்கும் நீங்கள் தமிழுக்கு மட்டும்...
மு.அ. டக்ளஸ் தேவானந்தா என்றால் முதுகெலும்பில்லாத அடிமை என்று நான் சொல்ல வரவில்லை. முக்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்றே கூறுகின்றேன். இந்த அரசும் - அரசுடன் சேர்ந்திருக்கின்ற மேற்படி மு.அ,களும் - தம்மை தமிழர் உரிமைக்காக போராடுபவர்களாக காட்டிக்கொண்டு தமிழர்களின் உரிமைகளை மறைத்தும் - மறுத்தும்தான் - பேசுவார்கள் ." - இவ்வாறு கொழும்பில் இருந்து இயங்கும் காட்சி ஊடகம் ஒன்றில் தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்....
முன்பெல்லாம் தெரு நாய்களை யாராவது துன்புறுத்தினால்தான் த்ரிஷாவுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வரும். அவர்களைப் பார்த்து, உங்களுக்கு இதயமே இல்லையா? ஐந்தறிவு பிராணிகளை இப்படி கஷ்டப்படுத்துகிறீர்களே என்று தனது டுவிட்டரில் கொந்தளிப்பார். அப்படி தனது கருத்துக்களை பதிவு செய்து வந்த த்ரிஷா, சமீபகாலமாக சில சமூக சாடல்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, டெல்லி விலங்கியல் பூங்காவில் ஒரு மாணவனை புலி அடித்து கொன்ற விவகாரத்தில், ஐந்தறிவு மிருகத்திற்கு என்ன...
தாமிரபரணி படத்தையடுத்து விஷாலை வைத்து ஹரி இயக்கியுள்ள படம் பூஜை. விஷாலுடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தையடுத்து மீண்டும் சூர்யாவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக டைரக்டர் ஹரி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், இந்த படத்தையடுத்து மீண்டும் சூர்யாவை இயக்குகிறேன். அவரிடம் இரண்டு ஆக்சன் கதைகள் சொல்லியிருக்கிறேன். இரண்டு கதைகளுமே எனக்கு பிடித்த கதைகள்தான். ஆனால்...
அம்பிளாந்துறையூர் அரியம் எழூதிய யாழ்தேவி வந்தால் என்ன! மூதேவி வந்தால் என்ன!  
  கிளிநொச்சி, ஆனையிறவுப் பகுதியில் 14.10.1998 அன்று ஆனையிறவு படைத்தள வேவு நடவடிக்கையின் போது சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் நிலவன் அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
இலங்கையின் இணையத்தள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சீனாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. இலங்கை தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ நிறுவனத்தில் இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை மற்றும் சீனாவின் இணையத்தள துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான அவசர வினையாற்றல் குழுவினர் தமது அரசாங்கங்களின் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் இணையத்தளப் பயன்பாடு, பாதுகாப்பு மற்றும் இணையத்தளப் பாவனையைக் கட்டுப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் சீனாவின் உதவியைப் பெற்றுக் கொள்ள இலங்கை...
யுத்தத்தால் அழிவுற்று மெல்ல மெல்ல மீண்டுவரும் பாடசாலைகளில் நூல்வளம் பெருக்கும் நோக்கோடு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் முன்னெடுக்கப்பட்டுவரும் கல்விச்செழுமை செயற்திட்டத்தில் இன்று நான்கு பாடசாலைகள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. துணுக்காய் வலயத்தில் உள்ள நான்கு பாடசாலைகளுக்கு இன்று காலை விஜயம் செய்த ரவிகரன், பெறுமதியான பயிற்சிப்புத்தங்களை வழங்கியதோடு பாடசாலைகளில் நிலவும் குறைகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார். இது தொடர்பாக மேலும் அறியவருவதாவது, கல்விச்செழுமை செயற்திட்டத்தில்  முதலாம் கட்டமானது முல்லை கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் உள்வாங்கியிருந்த...