பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களை தண்டனைக்கு உட்படுத்துவதா? அல்லது அவர்களுக்கு பாதுகாப்பளிப்பதா? என்ற இரு முரண்பாடான கருத்து நிலைப்பாடுகள் தொடர்பிலான விவாதங்கள் இந்த வாரம் கனேடிய நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டுள்ளன. கனடாவின் தற்போதய பழமைவாதக் கட்சி அரசாங்கம் புதிதாக கொண்டுவந்துள்ள பாலியல் தொழில் தொடர்பிலான சட்டமூலம் இன்னமும் பாலியல் தொழிலாளர்களை குற்றவாளிகளாகவே காண்பதாக விவாதத்தின் போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கனடாவில் நடப்பில் இருந்த பாலியல் தொழில் தொடர்பிலான சட்டத்தினை அரசியல் யாப்புக்கு ஒப்புடையது...
இலங்கை நாடாளுமன்றில் போதியளவு உறுப்பினர்கள் பிரசன்னமாகாத காரணத்தினால் நாடாளுமன்ற அமர்வுகள் நாளை வியாழக்கிழமை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் காரணத்தினால் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அவை நடவடிக்கைகளை நாளை வரையில் ஒத்தி வைத்துள்ளார். ஜூலை பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் சமால் ராஜபக்ச தலைமையில் ஆரம்பமானது. எனினும் பின்னர் போதியளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பிரசன்னமாகியிருக்காத காரணத்தினால், அவை நடவடிக்கைகளை நாளை வரையில்...
விடுதலைப்புலிகளின் சொத்துக்கள், புதையல்கள் மற்றும் தரகு பணம் மூலம் ராஜபக்ஷவினர் பெற்ற பெருந்தொகையான பணம் பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு செல்வந்தர்கள் ஊடாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ராஜபக்ஷவினரின் கறுப்பு பணம் பற்றி விசாரணை நடத்தும் சர்வதேச குழுவொன்று கண்டறிந்துள்ளது. இந்த செய்தியை வெளியிட்டுள்ள சிங்கள இணையத்தளம் ஒன்று விசாரணை நடத்தும் குழுவின் பெயரை தற்போது வெளியிட முடியாது எனக் கூறியுள்ளது. மேற்படி பாகிஸ்தான் செல்வந்தர்களில் ஒருவர் சில காலம் பாகிஸ்தான் அமைச்சராக இருந்த...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நீக்கப்பட்டால், அதற்கு எதிராக போராட அந்த கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் தயாராகி வருவதாக சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவித்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தொடர்ந்தும் கட்சியின் செயலாளரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை தாழ்த்தியும் புறந்தள்ளியும் வருகிறார். இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் கூடிய கவனத்தை செலுத்தி...
எதிர்க்கட்சித் தலைவர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஒரு மேடையில் சந்திக்க உள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா ஆகியோருடன் முன்னாள் ஜனாதிபதி நாளைய தினம் ஒரே மேடையில் தோன்றவுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறை ஏன் ஒழிக்க வேண்டும் ?...
கினிகத்ஹேன பொலிஸ் பிரிவிக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 16 வயது மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு உதவி செய்த அதிபர் மற்றும் ஆசிரியையை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய அமில ஆரியசேன இன்று செவ்வாய்கிழமை (22) உத்தரவிட்டுள்ளார் கடந்த 2007.11.12.அன்று குறித்த பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்று வந்த மாணவியை அப்பாடசாலையின்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் கொலைக்குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த ஒருவர் தோட்டம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தேற்றாத்தீவில் உள்ள குறித்த நபரின் மரக்கறித்தோட்டத்திலேயே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் நஞ்சருந்தியே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர் கடந்த ஒரு மாதகாலத்துக்கு முன்பாக தனது மாமானார் மீது தாக்குதல் நடத்தியநிலையில் அவர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்....
விசுவநாதன் உருத்திரகுமாரன்                         விசுவநாதன் உருத்திரகுமாரன். நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர். இவர் மீதும் ஏராளமான விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும்  உண்டு. ஆனால், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின், பிரபாகரனுக்கு அடுத்த நிலையில், தன்னை நிறுத்திக்கொண்டிருக்கிறார் உருத்திரகுமாரன். இலங்கை அரசு எப்படியாவது இவரைக் கைது செய்து, நாடு கடந்த தமிழீழ அரசமைப்பை முடக்கிவிடத் துடிக்கிறது. ஆனால், அமெரிக்கக் குடியுரிமை பெற்ற வழக்கறிஞரான உருத்திரகுமாரன், சட்ட ரீதியிலான காய் நகர்த்தல்களால் தப்பிக்கிறார்....
  யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள இலங்கையரசு, மீண்டும் யுத்தம் கட்டவீழ்த்துவிடுவதற்கான சதித்திட்டங்கள் அரச தரப்பிலிருந்து கசியத்தொடங்கியுள்ளது. யுத்தத்தை எவ்வாறு முன்னெடுப்பது அல்லது எவ்வாறு இனவாதங்களைத் தூண்டிவிடுவது, அதிலிருந்து நாட்டை சமாதான சூழ்நிலையற்றதாகமாற்ற வெளிநாட்டு தீயசக்திகள் முன்னின்று செயற்பட்டுவருகின்றன. அதற்கு இலங்கையரசு விலைபோயுள்ளதாக புலனாய்வுச்செய்திகள் தெரிவிக்கின்றன. மாவிலாறில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் நிறைவடைந்த யுத்தத்தின் வடுக்கள் இன்னமும் தமிழ்மக்கள் மத்தியில் ஆறாத நிலையில் இருந்துவருகின்றது. தற்பொழுது சமாதான காலம், பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டிவிட்டோம் எனக் கூறும்...
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது உண்மையென்றால் வடக்கில் ஏன் அவ்வளவு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கில் பாரியளவில் அமைதி நிலவினால் ஏன் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்களின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கவே இவ்வாறு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அநீதிக்கு எதிராக 1956ம் ஆண்டுக்கு முன்னதாகவே தமிழ் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். காலத்திற்கு காலம் ஆட்சி...