பிரித்தானியாவில் 16 வயது சிறுமி ஒருவர் 4 முறை கருக்கலைப்பு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.16 வயது சிறுமி ஒருவர் கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரிடம் மருத்துவர் விசாரணை செய்ததில் இது தனக்கு ஐந்தாவது கருக்கலைப்பு என கூறியதை கேட்டு திடுக்கிட்டுள்ளார். பிரித்தானியாவில், கடந்த 2011ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பமாவது அதிகரித்து வருவதாக பிரபல பத்திரிகை எடுத்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. கருத்துக்கணிப்பின்படி கடந்த 2012ம்...
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து இரகசிய விசாரணை நடத்தப்படுவதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. ஐ.நா விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள மூன்று நிபுணர்களில் ஒருவரான அஸ்மா ஜஹாங்கீர் வெளியிட்டு வரும் தொடர்ச்சியான கருத்துகள் வருத்தமளிப்பதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் விபரங்களை வெளியிடுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் மறுத்திருந்தார். இதுகுறித்துக் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர், ஜீ.எல்.பீரிஸ்...
        கடந்த மாதம் பிரித்தானியாவிற்கு வருகை தந்திருந்த இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக்குழுவிடம் எச்;சரிக்கையுடன் கூடிய ஒரு செய்தி தமி ழர் தரப்பினால் வழங்கப்பட்டிருந்தது. கடந்த 25.05.2014 அன்று லன்டனில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உயர்மட்டக்குழுவுக்கும் தமிழர் தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற ஒரு முக்கிய சந்திப்பின் பொழுது தமிழர் தரப்பினால் இந்தச் செய்தி முஸ்லிம் காங்கிரசிற்கு வழங்கப்பட்டது. தமக்கு இரகசியமா கக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தாம் இந்த...
  இலங்கையின் வடக்கில் உள்ள கடற்கரை நகரான வல்வெட்டித்துறையில் திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கும், பார்வதிக்கும் கடைசி மகனாக பிரபா கரன், 1954 நவம்பர் 26ல் பிறந்தார். வேலுப்பிள்ளை இலங்கை அரசில் பணிபுரிந்தவர். பிரபாகரனுக்கு அண்ணனும், இரண்டு அக்காவும் இருக்கின்றனர். ஊரிக்காடு எனும் இடத்தில் சிதம்பரா கல்லூரியில் 10ம் வகுப்பு வரை பிரபாகரன் கல்வி கற்றார். 1958ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள வர்கள் நடத்திய கலவரம், 4 வயது சிறு வனாக...
  காரைநகரில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான சிறுமியின் குடும்பத்தினருக்கு கடுமையான நெருக்குதல்கள் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சிறுமியையும் குடும்பத்தினரையும் காரைநகர் கடற்படை முகாமிற்கு அலைக்கழித்த கடற்படையினர் பிரச்சனையை பெரிதாக்காமல் விடும்படியும், அங்கு இருக்காமல் வேறு இடத்திற்கு மாறிச் செல்லும்படியும், இல்லாவிடில் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரும் எனவும் மிரட்டி வருவதாக தெரிய வருகிறது. இதேவேளை இன்று (17.07.14) சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
  கிளிநொச்சியில் தொடர்ச்சியாக நிலவிவரும் கடும் வரட்சி காரணமாக மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்;டில் பிரதேச செயலகங்கள் ஊடாகவும்,மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மூலமும் பல கிராமங்களுக்கும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் தொடர்ச்சியாக கிணறுகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து செல்வதனால் மக்களுக்கான குடிநீர் தேவையும் அதிகரித்து...
மலேசிய விமானமொன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 295 பயணிகள் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஸ்யாவின் எல்லைப்பகுதியில் உக்ரேய்னின் கிழக்குப் பகுதியில் இந்த விமான விபத்து இடம்பெற்றுள்ளது. கோலாலம்பூரிலிருந்து அம்ஸ்டாம் நோக்கிப் பயணம் செய்த எம்.எச்.17 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாக மலேசிய விமான சேவை அறிவித்துள்ளது. இதேவேளை, கிழக்கு உக்ரேய்ன் பகுதியில் விமானம் வெடித்து சிதறியுள்ளதாக மொஸ்கோவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான விபத்து இடம்பெற்ற பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக...
வவுனியா மாவட்ட நீதிமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் பிரதம நீதியரசர் மொகான் பீரிசினால் இன்று (17.7.14) நாட்டிவைக்கப்பட்டது. வவுனியா நீதிமன்ற கட்டிட தொகுதியில் இன்று காலை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி கே. சிவபாலசுந்தரம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிகள், வவுனியா சட்டத்திரணிகள் சங்க தலைவர் க. தயாபரன், ஜனாதிபதி சட்டத்தரணி மு. சிற்றம்பலம், சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ஆகியோரும் கலந்து...
  குடிக்க தண்ணீர் கேட்ட போது பொலிஸ் அதிகாரி தன் வாயில் சிறுநீர் கழித்தார் என சந்தேக நபர் ஒருவா் முறைப்பாடு செய்துள்ளார். சிலாபம் பொலிஸ் நிலையத்தின் தீர்க்கப்படாத பிணக்குகள் பிரிவு அதிகாரிகள் தம்மை துன்புறுத்தியதாக 28 வயதான சஞ்சீவ எதிரிசிங்க என்ற நபர் குற்றம் சுமத்தியுள்ளார். மாதம்பை செம்புகட்டிய பிரதேசத்தில் உள்ள கடையொன்று கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் சஞ்சீவ உள்ளிட்ட மூன்று பேரை பொலிஸார் கடந்த மே மாதம் 9ம் திகதி சந்தேகத்தின்...
யாழ்.காரைநகர் ஊரி கிராமத்தில் கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட இரு சிறுமிகளின் பெற்றோர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர். இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் உயர்மட்ட நடவடிக்கை எடுக்கப்படும், படையினர் மக்களுடைய வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவோம் என கூட்டமைப்பினர் உறுதி மொழியும் வழங்கியுள்ளனர். இன்றைய தினம் மாலை 2.30 மணியளவில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சி.சிறீதரன், சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் ஈ.சரவணபவன்...