இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சிவில் அமைப்புக்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு;ள்ளமை குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தக் கூடாது, ஊடக அறிக்கைகளை வெளியிடக் கூடாது, ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கக் கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை பாதுகாப்பு அமைச்சு விதித்திருந்தது. அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து உன்னிப்பாக அவதானம்...
இலங்கையில் நல்லிணக்கத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது மிகவும் முதன்மையானது என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜென் போல் மொன்சுவா (துநயn-Pயரட ஆழnஉhயர) தெரிவித்துள்ளார். இலங்கை மக்களின் நண்பர்கள் என்ற ரீதியில் நல்லிணக்கம் குறித்து பிரான்ஸூம், ஐரோப்பிய ஒன்றியமும் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் மீளவும் யுத்தம் இடம்பெறாமல் இருப்பதனை தடுக்க வேண்டுமாயின் நல்லிணக்கம் தொடர்பில் கூடுதல் கவனம்...
இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவும் இலங்கையின் புதிய தூதுவர் பிரசாத காரியவசமும் சந்திப்பின் போது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற குறுகிய கால நிகழ்வின் போது இந்த கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அமெரிக்காவுக்கான தூதுவராக நியமனம் பெற்றுள்ள பிரசாத் காரியவசம் ஒபாமாவிடம் தமது நியமனக் கடிதத்தை கையளித்தார். இந்த நிகழ்வு இன்று மாலை இடம்பெற்றதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்தநிலையில் வெள்ளைமாளிகை விருந்தினர் புத்தகத்தில் தமது கருத்தை பதிவுசெய்த...
  அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க முடியாது! - ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கவில்லை: விக்னேஸ்வரன் - தெளிவாக கூறவில்லை சிவஞானம் ஜனாதிபதியின் அழைப்பை வடக்கின் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார். நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்துக்கு வருமாறு ஜனாதிபதி அனைத்து மாகாண முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இதில் விக்னேஸ்வரனும் உள்ளடங்குகிறார். எனினும் தாம் உள்ளுர் பணிகளை ஏற்கனவே குறித்த தினத்தில் ஒழுங்கு செய்துள்ளமையால் அதனை தவிர்க்க முடியாது என்ற காரணத்தினால் அமைச்சரவை கூட்டத்துக்கு சமுகமளிக்க முடியாது...
சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்...
சிறீலங்கா அரசாங்கத்தை நோக்கி, சர்வதேசரீதியாக போர்க்குற்றத்தை மையமாக வைத்து நகரும் வலையிலிருந்து தப்பும் முகமாக, சிறீலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவை மாட்டிவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கசியும் செய்திகள் தெரிவிக்கின்றன. முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலரை படுகொலை செய்ததென்ற குற்றச்சாட்டில் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவை நோக்கி பொறிவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 53ஆவது படையணியின் 8 விசேட படைப்பிரிவுக்கு தலைமை வகித்தவர் மேஜர் ஜெனரல் கமால்...
சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி, ரொபேட் பயஸ், ஜெயகுமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்பான விடுதலை, இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த கணத்தில் சட்டச் சிக்கலை சந்தித்துள்ளதாக அறியமுடிகிறது. அதேவேளை, இவர்களின் விடுதலை என்பது சட்ட பரிமாணத்துடன் (Dimension), அரசியல் – இராஜதந்திர பரிமாணங்களையும் முதன்மையாகக் கொண்டது. அதனடிப்படையில், இவர்கள் ஏழு பேரினதும் விடுதலை தொடர்பான பல்வேறு பரிமாணங்களையும், இவர்களின் விடுதலையின் அடித்தளத்தையும் மற்றும் அது எதிர்காலத்தில்...
யூலை மாதம் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோ அமைப்பின் முன்னணித் தலைவர்கள் உட்பட உட்பட 53 வீர மறவர்களின் 31வது ஆண்டு நினைவு நாள், இலங்கை மற்றும் புலம் பெயர் நாடுகளில் இருந்து வருகை தந்த புலம் பெயர் உறவுகளால் அனுஸ்டிக்கப்பட்டது. இலங்கை அரசினால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனப்படுகொலையின் கறுப்பு யூலை நினைவு தினத்தையொட்டி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் தங்கத்துரை, குட்டிமணி,...
தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் இன்றைய தினம் தம்மை பின்தொடர்ந்ததாகத் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மாலை 4.00 மணியளவில் நீதிமன்றிலிருந்து திரும்பிய போது இனந்தெரியாத மோட்டார் சைக்கிள்தாரிகள் தம்மை பின்தொடர்ந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊடக சந்திப்புக்களை நடாத்துதல், ஊடக அறிக்கைகளை வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிராக கருத்து வெளியிட்டதன்...
1987 ஜூலை 29 அன்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் இணைப்பாக சில அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. 1. இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் உடன்பாட்டின் இரண்டாவது பத்தி மற்றும் அதன் துணை பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை கவனிக்க, இந்தியத் தேர்தல் கமிஷனின் பிரதிநிதி ஒருவரை மேதகு இலங்கை அதிபர் அழைப்பார் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். 2. அதேபோன்று இருநாட்டுத் தலைவர்களும் ஒப்பந்தத்தின் பத்தி 2.8-இல் குறிப்பிட்டுள்ள...