இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. துவக்க வீரர்களாக முரளி விஜய்யும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ஆட்டத்தின் 7வது ஓவரில் 24 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்த தவான் விக்கெட் கீப்பர் பிரியரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டனார்....
தாய் அந்த பிள்ளைக்கு அடிப்பதை வீட்டில் வளர்த்த நாய்கள் தடுக்கின்றது! 6 அறிவு மனிதனுக்கு இல்லாத உணர்வு 5 அறிவு மிருகங்களுக்கு? என்ன ஆச்சரியம்
நாங்கள் இன்றைய ஐ.நா விசாரணையை குறைத்து மதிப்பிட முடியாது காரணம் இதன் தாக்கம் எதிர் காலத்தில் பாதுகாப்புச் சபையில் முக்கிய இடம் பெறுவதை யாரும் தடுக்க முடியாது வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன். ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் விசாரணைகளை வலுப்படுத்த நாம் இயன்றவரை உதவுவதுடன் அதனது வெற்றி ஒவ்வெருவரினதும் கடமை என வடமாகாண போக்குவரத்து கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிபத் துறை அமைச்சர் டெனிஸ்வரன் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய...
இலங்கையில் ஜனநாயக நெறிமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என ராஜபக்ஷ நிர்வாகம் நாட்டு மக்கள் மற்றும் வெளியுலகத்திடம் கூறி வருகின்ற போதும் பாதுகாப்பு அமைச்சு அதற்கு இணையான அடாவடி நிர்வாகம் ஒன்றை நாட்டில் செயற்படுத்தி வருவதை தெளிவாக காண முடிவதாக ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டுள்ள அரசசார்பற்ற அமைப்புகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள உத்தரவு தொடர்பாக அந்த கட்சியின்...
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்தும்விதமாக அங்குள்ள சன்னி போராளிகள் கடந்த சில வாரங்களாகத் தீவிரமாகப் போரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டின் தலைநகர் பாக்தாத்திற்கு தெற்கே உள்ள விவசாயப் பகுதி ஒன்றில் கண்களும், கைகள் பின்னாலும் கட்டப்பட்டுக் கிடந்த 50 சடலங்களைக் கண்டெடுத்துள்ளதாக ஈராக்கிய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. பாக்தாத்திலிருந்து 95 கி.மீ தொலைவில் உள்ள ஷியா பெரும்பான்மையினர் வசிக்கும் ஹில்லா...
இங்கிலாந்தில் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன. அந்நாட்டில் அரசியல் ரீதியாகப் பிரபலமாகியுள்ள முன்னாள் மற்றும் இந்நாள் அரசியல்வாதிகள் 10 பேர் உட்பட மொத்தம் 20 பிரபலங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர். உயர் பதவியில் இருப்போர், அரசியல்வாதிகள், மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் சில நீதிபதிகள் மீது நீண்டகாலமாக இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றது. விரைவில் இவர்கள் விசாரணையை எதிர்நோக்கக்கூடும் என்று குழந்தைப் பருவத்தில் பாதிக்கப்பட்டோரின் தேசிய...
  இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் காசா பகுதியை ஆட்சி செய்யும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் இளைஞர்கள் 3 பேரை கடத்தி சென்று தீவிரவாதிகள் கொன்றனர். அதற்கு பழிவாங்கும் செயலாக பாலஸ்தீனிய இளைஞரை கடத்திய 3 யூதர்கள் அவர்களை உயிருடன் எரித்து கொன்றனர். இதனால் இஸ்ரேலுக்கும், காசா தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. காசா பகுதியில் உள்ள நகரங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு...
உலக நாடுகள் அனைத்திலும் போலியோ நோயை ஒழிக்க உலக சுகாதார கழகமான ‘யூனிசெப்’ தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா ஆகிய மூன்று நாடுகளிலும் இவர்களின் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த முடியவில்லை. பாகிஸ்தானில் போலியோ தடுப்பு முகாம் திட்டத்தினை இஸ்லாமியப் போராளிகள் எதிர்த்து வருகின்றனர். இத்திட்டத்தில் பணியாற்ற வரும் சுகாதார ஊழியர்களைக் கடத்திச் செல்வதும், தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க வரும் செவிலியர்களைத் தாக்கி விரட்டுவதுமாக...
  சிரியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் படைகள் ரசாயன ஆயுதங்களை பிரயோகித்து குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பொது மக்களை கொன்று குவித்தன. இந்த தாக்குதலுக்கு ஐ.நா.சபையும் உலகின் பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து, ஐ.நா. சபையின் ஏற்பாட்டின் பேரில் சிரியாவிடம் இருந்த பயங்கர ஆபத்தை விளைவிக்கக் கூடிய ரசாயன ஆயுதங்களை கைப்பற்றி அழிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், ‘சரின்’ எனப்படும்...
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 17 பேரைக் காணவில்லை. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஷாவா கிராமத்தில் இன்று அதிகாலை திடீரென மண்சரிவு ஏற்பட்டது. சகதி மற்றும் பாறைத்துண்டுகள் ஒட்டுமொத்தமாக சரிந்து விழுந்ததால் 17 பேர் உள்ளே சிக்கிக்கொண்டனர். நுஜியாங் ஆற்றங்கரையில் நடந்த இந்த சம்பவம் நடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சுமார் 140 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று...