தசைப் பிடிப்பு காரணமாக நடிகர் கமல்ஹாசன் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார். நடிகர் கமல்ஹாசன் சனிக்கிழமை மாலை தனியார் தொலைக்காட்சி விருது நிகழ்ச்சிக்குச் செல்லும் முன்பு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். பொது மருத்துவர் ஜே.ஆர்.சுப்பிரமணியனைச் சந்தித்து தசைப் பிடிப்புக்கு பரிந்துரையைப் பெற்ற அவர் பின்பு அங்கிருந்து கிளம்பி விருது வழங்கும் நிகழ்ச்சிக்குச் சென்றார். சென்னையில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் படப் பிடிப்பு நடைபெற்று வருகிறது.
 முதுகெலும்பு முறிவு காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார் நெய்மர். பிரேசிலில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் பிரேசில் அணி, கொலம்பியாவை 2–1 என, வீழ்த்தியது. இந்த போட்டியின் 88வது நிமிடத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் முதுகின் மீது, கொலம்பியாவின் ஜுனிகா, தனது வலது முழங்காலை வைத்து மோதினார். இதனால் காயமடைந்த நெய்மர், உடனடியாக களத்தில் இருந்து வெளியேறினார். இவரது முதுகெலும்பு உடைந்ததை அடுத்து, உலக...
எகிப்து நாட்டில் முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆட்சி புரிந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2011ஆம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கி முகமது மோர்சி ஆட்சியைப் பிடித்தார். ஆனால் அவரது ஆட்சியும் ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்கவில்லை. சென்ற வருடம் ஜூலை மாதம் அவரது பதவியிறக்கத்திற்குப் பின் இந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற்று அந்நாட்டின் ராணுவத் தளபதியாக இருந்த அப்டெல் படா எல் சிசி அதிபர் பொறுப்பை ஏற்றுள்ளார். கடந்த...
போலந்து நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள செஸ்டோசோவா பாராசூட் கிளப்பிற்கு அருகில் நடைபெற்ற ஒரு விமான விபத்தில் 11 பேர் பலியானதாகவும், ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுவந்த அவசர சேவைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.பைபர் நவஜோ என்ற அந்த விமானம் 11 பாராசூட் வீரர்கள் மற்றும் ஒரு விமானியுடன் தெற்கிலிருந்து பறந்து வந்துகொண்டிருந்ததாகவும், அதன் என்ஜினிலிருந்து வினோதமான சப்தங்கள் வந்துகொண்டிருந்ததாகவும்...
உள்நாட்டுப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஈராக்கின் நஜ்ப் நகரில் சிக்கி, வெளியேற வழியின்றி தவித்தவர்களில் மேலும் 200 இந்தியர்கள் இன்று நாடு திரும்பினர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டின் பேரில், ஈராக்கில் உள்ள இந்திய தூதரகம் எடுத்த தீவிர முயற்சியின் பயனாக ஈராக் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவர்கள் புது டெல்லி வந்தடைந்தனர். ஈராக்கில் தவிக்கும் மேலும் பல இந்தியர்களை ஈராக் ஏர்லைன்ஸ், ஏர்...
உலகமெங்கும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் இருக்கிறார்கள். தாய்லாந்து நாட்டில், சாங், இங்க் பங்கர் சகோதரர்கள் 1811-ம் ஆண்டு மே மாதம் 11-ந் திகதி பிறந்தார்கள். அதிகபட்சமாக இவர்கள் 62 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து சாதனை படைத்தனர். 1874-ம் ஆண்டு ஜனவரி 17-ந் திகதி இங்க் பங்கர் உறங்கிக்கொண்டிருந்தபோது, சாங் நுரையீரல் நோயால் இறந்து விட்டார். சகோதரர் மறைவு, இங்க் பங்கரை உலுக்கியது. அடுத்த 3 மணி நேரத்தில் அவர் இறந்து விட்டார். அவர் சகோதரர் இறந்த...
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மத்திய அரசின் தணிக்கை குழுவின் தமிழ்நாட்டு பிரிவில் கடும் ஆள்பற்றாக்குறை உள்ளது. இதனால் படங்கள் தணிக்கைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறது. ஆள் பற்றாக்குறையால் படங்கள் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு அறிவிக்கப்பட்ட தேதியிலும் படங்களை வெளியிட முடியவில்லை. சரபம் படம் வருகிற 11ந் தேதி வெளிவருவதாக இருந்தது. படம் தணிக்கைக்கு காத்திருப்பதால் தள்ளிப்போகிறது. இது தவிர மெட்ராஸ் உள்பட 15 படங்கள் தணிக்கைக்காக...
பாரதிராஜா இயக்கிய 'பொம்மலாட்டம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். அந்தப் படம் வெளிவந்து சுமார் ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தாலும் அப்போது எப்படி இருந்தாரோ அப்படியேதான் இன்று வரை இருக்கிறார். ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் சரியான உடலமைப்பில் அவருடைய அழகை அவர் பராமரித்து வருகிறார். தமிழை விட தெலுங்கில் காஜல் அகர்வாலுக்கு வரவேற்பு அதிகம். அதோடு ஹிந்திப் படங்களிலும் நடித்து அங்கம் புகழ்...
முன்பெல்லாம் படத்தில் இடம் பெறும் சில பாடல்களுக்கு கவர்ச்சி நடிகைகள் மட்டுமே நடனமாடி வந்தார்கள். ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா, அல்போன்சா, முமைத் கான் என இந்த பட்டியல் நீளும்...ஆனால் இப்போதெல்லாம் பல முன்னணி நடிகைகளே இம்மாதிரியான பாடல்களுக்கு நடனமாடி விடுகிறார்கள். கதாநாயகியாக இருக்கும் போதே இம்மாதிரியான பாடல்களில் நடனமாடிய பலர் இருக்கிறார்கள். இப்போதும் அதே மாதிரி பலரும் நடனமாடி வருகிறார்கள். தமிழ்...
ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கும் 'ஐ' படம் நீண்டகால தயாரிப்பாக உருவாகி வருகிறது. விக்ரம், எமிஜாக்சன், சுரேஷ்கோபி, ராம்குமார் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட்புரடக்ஷன்ஸ் வேலைகள் இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. சில நாட்களுக்கு முன்தான் இப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலை பாடினார். ஐ படத்திற்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், 'இப்படத்தின் அனைத்து பாடல்களின்...