ஜீலை 5 கரும்புலிகள் நினைவு நாள் உலகம்எங்கும் உள்ள தழில்மக்கள் இதனை கொண்டாடுவார்கள் சிங்கள தேசம் இதனை மறக்காது தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறீலங்காப்படையினர் மீது மில்லர் கரும்புலித்தாக்குதல் நடத்தி இன்று 27 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்தவகையில் கடலிலும் எதிரிக்கு...
கிளிநொச்சி அரச செயலகத்துக்கு முன்பாக நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் கடுமையான கண்காணிப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டு...
சென்னை கட்டிட விபத்தில் கட்டிப்பிடித்த நிலையில் இறந்து கிடந்த இரண்டு தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 5 வது நாள் மீட்புப் பணியின்போது தரைத் தளத்தில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டியபோது கட்டிப்பிடித்த நிலையில் இருந்த 2 ஆண் சடலங்களை மீட்பு குழுவினர் மீட்டனர். கட்டிடம் இடிந்து விழுந்தபோது அருகே நின்று பேசிக்கொண்டிருந்தவர்கள் சாவை கண் எதிரே பார்த்த அச்சத்திலும், அதிர்ச்சியிலும் இருவரும் கட்டிப்பிடித்தபடி இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இருவரும்...
வட மாகாணசபை உறுப்பினர் கேள்வி? யாழ் நகரிலும், யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதிகளில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களிலும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் குறித்த தகவல் திரட்டொன்று தம்மை பொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய இரு அதிகாரிகளினால் 2014 ஜூலை முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் மேற்கொள்ளப்படுவதாக அறியக்கிடைக்கின்றது. மேற்படி தகவல் திரட்டல் நடவடிக்கை முஸ்லிம் வியாபாரிகளை மாத்திரம் மையப்படுத்தியதாக அமைந்திருக்கின்றது. இதன் காரணமாக முஸ்லிம் வியாபாரிகள் மத்தியில் அமைதியற்ற ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. மேற்படி...
அளுத்கம வன்முறைகளின்போது ஏற்பட்ட சேதங்களை புனரமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் போதுமானவையல்ல என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி இதனை குறிப்பிட்டுள்ளார். அளுத்கம புனர் அமைப்புக்காக 200 மில்லியன் ரூபாய்களை இலங்கை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இந்தநிலையில் இது, கட்டிட சேதங்களை மறைக்கக்கூட போதாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதியாக முஸ்லிம்கள் தம்மை தாமே தாக்கிக் கொண்டதாகவும் தமது வீடுகளுக்கு தாமே தீயிட்டுக் கொண்டதாகவும் அரசாங்கம் கூறுவதாக...
கிளிநொச்சி- பரவிப்பாஞ்சான் மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் கட்டப் போராட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக நடைபெறவுள்ளது. யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் இன்றுவரை மீள் குடியேற்றப்படவில்லை. இவர்கள் பல ஆண்டுகளாக நண்பர்கள்,உறவினர்கள், வீடுகளில் அகதிகளாக தங்கிவாழ்கின்றனர். இவர்களுடைய வீடுகள் மற்றும், பொது நிலையங்கள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 28 ஆம் திகதி...
இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த  நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். பான் கீ மூனின் இந்தக்கோரிக்கையை அவரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று வெளியிட்டுள்ளார். இலங்கையின் தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பில் செயலாளர் கரிசனை கொண்டுள்ளதாகவும் டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையின்படி, சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர்களாக கருதப்பட்ட கோபி,  அப்பன் மற்றும் தேவியன் ஆகியோரின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் நேற்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மூன்று பேரும் ரைபிள் ரக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலை மற்றும் வயிற்றுப் பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த நபர்களின் மரணம் தொடர்பில் கெப்பிற்றிகொல்லாவ நீதவான் எஸ்.மகேந்திரராஜா முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. புலி உறுப்பினர்களின் குடும்ப அங்கத்தினர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பதவிய சுற்றுலா...
வவுனியா சிதம்பரபுரம் வீதியில் உள்ள கல்வீரங்குளத்தில் மூன்று கிளைமோர் குண்டுகள் இன்று வியாழக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா விசேட குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- வவுனியா சிதம்பரபுரம் வீதியில் உள்ள கல்வீரங்குளத்தில் இருந்து வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த விவசாயி ஒருவர் குளத்தின் உட்பகுதியில் உள்ள பாசிப்புதர்களுக்குள் கிளைமோர் குண்டுகள் இருப்பதைக் கண்டு வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார்...
ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் தாயகத் தமிழ் மக்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் இணைந்து தமிழீழத்தில் சிங்கள அரசால் நடத்தப்பட்டது இனப்படுகொலையே என்பதை ஒரே குரலாக எடுத்துரைக்க முற்பட்டவேளையில், கனடாவில் வசித்துவரும் திரு. கரி ஆனந்தசங்கரி அவர்கள் தலைமையிலான ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டும் இனப்படுகொலை எனும் பதத்தினைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஏனையோருக்கு பாரியளவில் அழுத்தம் கொடுத்திருந்தனர். இதன்போது ஐ.நா.வில் உரையாற்ற வந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...