தற்போது நாட்டில் பதிவு செய்யப்பட்ட யானைகள் 140 மட்டுமே உள்ளதாக வன விலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பதியப்படாத யானைகள் தொடர்பில் நாடு முழுவதும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளவுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் எப்.டீ.ரத்நாயக்க தெரிவித்தார். கடந்த 1991ஆம் ஆண்டு பதியப்பட்ட 350 யானைகள் இருந்ததாகவும் அவற்றில் 92 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை வேறு 90 யானைகள் தெஹிவளை மிருகக் காட்சிசாலை மற்றும் பின்னவல யானைகள் சரணாலயத்தில் உள்ளதாகவும்...
  முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு முன்பாக இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தண்ணீரூற்றைச் சேர்ந்த குலேந்திரன் சிவகங்காதேவி (வயது 52) என்பவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இவர் முல்லைத்தீவு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் என்று தெரிவிக்கப்பட்டது. அதே இடத்தைச் சேர்ந்த செல்லையா...
வட்டரக்க விஜித தேரர் "தன்னைத்தானே தாக்கிக்கொண்டு பொய்ப் புகார்" கொடுத்தார் என்கிறது போலிஸ் கடும் போக்கு பௌத்த அமைப்பான, பொது பல சேனாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட பௌத்த பிக்கு வட்டரக்க விஜித தேரர், தன்னைத்தானே தாக்கிக்கொண்டு பொய்ப் புகார் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார். மிதவாத பௌத்த அமைப்பாகக் கருதப்படும் , ஜாதிக பல சேனா என்ற அமைப்பின் பொதுச்செயலாளரான, வட்டரக்க விஜித தேரர் கொழும்பு தேசிய மருத்துவமனையிலிருந்து...
டீன் ஏஜ் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதற்குள் ‘போதும் போதும்’ என்றாகி விடுகிறது பெற்றோருக்கு. அந்தப் பருவம் ஏன் அத்தனை  குழப்பமானதாக இருக்கிறது? பிள்ளைகளைப் பொறுத்த வரை அந்த வயது, எல்லா பிடிகளையும் உடைத்துத் தகர்த்து சுதந்திரமாவதற்கு உந்துகிறது.  பெற்றோருக்கோ, அது இழுத்துப் பிடித்துக் கட்டுக்குள் வைக்கத் தூண்டுகிறது. பிள்ளைகளை எப்போதும் முந்தானையில் முடிந்து வைத்துக் கொள்ள  முடியாது. நீங்களோ, நானோ - அந்த பருவத்தில் நம் பெற்றோர் நம்மை...
  வீட்டு பிரச்னைகள் முதல் அலுவலக பிரச்னைகள் வரை அனைத்தையும் பலர், அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அது அவர்களுடைய நிம்மதிக்கே உலை வைத்து விடும். நீங்கள் மற்றவர்களின் மிக முக்கியமான ரகசியங்களை வெளிப்படுத்தும் போது, அதை வைத்து சிலர் உங்களை மிரட்டலாம். பணம் பறிக்கவும் செய்யலாம். நிலையை எல்லைமீறி போய் விடும் அந்த நேரத்தில் நீங்கள் வருந்தி பலனில்லை. சிலர் ஓட்டை வாயாக இருந்து, சும்மா போகிறவர்களைக்கூட அழைத்து தங்களுக்கு...
  அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற நூல் இந்த தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம். சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது ஆனால் பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி மூலப்பொருள்களில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்க தெரியாதவனுக்கு அந்த தங்க வயல் கிடைத்து என்ன பயன்? மலருக்கு மணம் எவ்வளவு அவசியமானதோ, வண்டுக்கு தேன் எவ்வளவு அவசியமோ, அது பேல் கொக்கோக அறிவு இல்லாது மேற்கொள்ளும் தாம்பத்திய உறவும்...
பீகாரில் நேற்று அதிகாலை ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்  புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், 4 பயணிகள் பலியாகினர். 8 பேர்  காயமடைந்தனர். இந்த விபத்துக்கு மாவோ தீவிரவாதிகள் சதி  காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது பற்றி விசாரிக்க  அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லி- திப்ரூகர் இடையே செல்லும்  ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில், பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில்  உள்ள சாப்ரா வழியாக நேற்று அதிகாலை 2 மணியளவில் சென்று ...
சின்ன வயசு ஹீரோ கதையை என் வயசுக்கு ஏற்ப மாற்றி நடிக்கிறேன் என்றார் கார்த்தி. கார்த்தி நடிக்கும் புதிய படம் மெட்ராஸ். அட்டகத்தி ரஞ்சித் டைரக்ஷன். ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். கேத்ரினா ஹீரோயின். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதன் ஆடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டார். இப்படத்தில் நடிப்பதுபற்றி கார்த்தி கூறும்போது, ஒரு நல்ல ஸ்கிரிப்ட் பல மாதமாக கோடம்பாக்கத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டதும் இயக்குனர் ரஞ்சித்தை வரவழைத்தேன்....
இளம் நடிகருடன் இணைத்து கிசுகிசு வெளிவருவதைஅறிந்து கோபம் அடைந்தார் நயன்தாரா. நயன்தாரா தீவிர நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மாஜி காதலன் சிம்புவுடன் இது நம்ம ஆளு என்ற படத்தில் நடிக்கிறார். ராஜா இயக்கத்தில் தனியொருவன் என்ற படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார். இதேபடத்தில் கணேஷ் வெங்கட்ராமனும் நடிக்கிறார். அவருடன் நட்பாக பழகும் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் நயன். ஆனால் நயனும், கணேஷ் வெங்கட்ராமனும் ஷூட்டிங்கில் நீண்ட நேரம்...
நாடோடிகள், சீடன், எங்கேயும் எப்போதும் என விரல்விட்டும் எண்ணும் அளவுக்கே தமிழ் படங்களில் நடித்திருக்கும் அனன்யா கடைசியாக புலிவால் என்ற படத்தில் நடித்தார். இதற்கிடையில் அனன்யாவுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதில் பிரச்னை ஏற்பட்டது. திடீரென்று குடும்பத்தினரே திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தனக்கு பார்த்த மாப்பிள்ளையை திருப்பதியில் ரகசிய திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அதிதி என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அனன்யா. இது திருமணம் ஆன...