ஈராக்கில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டம் அடைந்து வருகிறது. நாட்டின் 2-வது பெரிய நகரமான மொசூல் நகரத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 9-ந் திகதி பிடித்தனர். அதைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த நகரமான திக்ரித்தை கைப்பற்றினர். இந்த திக்ரித் நகரில் இந்திய நேஸ்கள் 46 பேர் (இவர்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்) உள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. இதையடுத்து சர்வதேச செம்பிறை சங்கத்தினரின் உதவியை...
தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் என்ற பெயரில் பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் உள்ள தர்கா மண்டி என்ற இடத்தில் சந்தேகத்துக்குரிய ஒரு வீட்டின் மீது நேற்று பறந்த அமெரிக்க ஆளில்லா விமானம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 6 பேர் பலியாகினர். பலியானவர்கள் பற்றிய உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், அமெரிக்காவின் இந்த அத்துமீறலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. 'நாங்கள் ஏற்கனவே பல முறை தெளிவாக தெரிவித்திருப்பதைப்...
இரண்டே நிமிடங்களில் 12 மைல் தூரத்தை கடந்த 'சூப்பர் சோனிக்' கார் ஒன்றினை வடிவமைத்துள்ள இங்கிலாந்து நிபுணர்கள், விரைவில் இந்த காரை மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பாய வைத்து, தரையில் அதிக வேகத்தில் செல்லும் முதல் வாகனம் என்ற சாதனையை எய்தவுள்ளனர். இந்த வாகனத்தின் என்ஜின், வெளிப்புறத் தோற்றம் மற்றும் ஓட்டுனர் அமரும் பகுதி போன்றவை சாதாரண கார்களில் உள்ளவை போல் இல்லாமல் ஒரு ராக்கெட்டில் உள்ளதை போன்றிருப்பது...
சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் மன்னராட்சிக்கு எதிராக பிரசாரம் செய்த 26 பேருக்கு மரண தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னரையும், அவரது அரசின் கொள்கைகளையும் விமர்சித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தவர்கள், பொது மேடைகளில் பிரசாரம் செய்தவர்கள், சுவரொட்டி மற்றும் சமூக வலைத்தளங்களின் மூலம் கருத்து தெரிவித்தவர்கள் ஆகியோருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர் என்ற குற்றச்சாட்டுடன் கடந்த 2012-ம் ஆண்டு சவுதி ராணுவத்தினரால் அடித்து, உதைத்து...
பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று இரவு நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில், நெதர்லாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. ஏற்கனவே ஸ்பெயினை வீழ்த்திய உற்சாகத்தில் இருந்த நெதர்லாந்து, ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. போட்டியின் 20வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ராபென் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். இதற்கு அடுத்த நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் டிம் காகில் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுக்க,...
பிரேசிலில் நடந்து வரும் 2014-உலக கோப்பை கால்பந்து போட்டியின் 'பி' பிரிவு ஆட்டத்தில் இன்று ஸ்பெயினை எதிர்கொண்ட சிலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆரம்பம் முதல் பந்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிலி வீரர்கள் மிக சிறப்பாக கோல்களை அடித்து ஸ்பெயின் வீரர்களை திணறடித்தனர். ஆட்டத்தின் பின்னிறுதியிலாவது ஸ்பெயின் வீரர்கள் பதிலடி தருவார்கள் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கும் வகையில் திறமையாக விளையாடிய சிலி அணி,...
    முஸ்லீம் அமைச்சர்கள் பதவி விலகினால் என்ன? விலகாவிட்டால் என்ன ? இரண்டும் ஒண்று தான் ?
* அளுத்கம பேருவளையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் * அமைச்சுப் பதவியை துறப்பதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை. * சர்வதேச விசாரணை தொடர்பிலான வாக்கெடுப்பில் நாம் ஆதரவாக வாக்களிக்காமல் இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரித்ததன் ஊடாக பலமான செய்தியொன்றை உலகுக்குச் சொல்லியிருக்கிறோம். * பொலிஸார் பக்க சார்புடன் செயற்பட்டுள்ளமை வேதனையை அளிக்கிறது. * பொதுபலசேனாவின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். * சர்வதேசத்திடம் முறையிட்டாவது எமது மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பேன். அமைச்சுப் பதவியை துறந்தால் எமது...
சர்வதேச விசாரணைக்குழு தொடர்பில் ஆளுங்கட்சி கொண்டுவந்த தீர்மானம் 134 அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஏற்பாட்டில் சுயாதீன விசாரணை மேற்கொற்வதற்காக விசாரணைக்குழு இலங்கை பயணமாகும் என்று முடிவாகியிருந்தது. இந் நிலையில் விசாரணைக்குழுவிற்கு எதிராக பிரேரணை ஒன்றை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் கொண்டுவந்திருந்தது. இது தொடர்பிலான விவாதம் நேற்றும் இன்றும் நடைபெற்றிருந்த நிலையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது. வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே எதிர்த்து...
 தொடக்கம் 1: மியான்மார்: திகதி – 20 மார்ச் 2013முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஒரு நகைக்கடையில் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் வாய்த்தகராறு நடக்கிறது. வாய்த்தகராறில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக பௌத்த மதத்தைச் சேர்த்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள். சில மணித்தியாலங்களில் அந்த கடை அடித்து சேதமாக்கி அழிக்கப்படுகிறது. இதன் விளைவாக ஒரு பௌத்த பிக்கு எரிக்கப்பட்டுவிடுகிறார். இதை சாட்டாக வைத்து முஸ்லிம்கள் மீது மோசமான இன அழித்தொழிப்பு நடந்தேறியது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள்...