அனுஷ்காவுடன் இணைந்து நடிக்கிறார் திரிஷா. விஷ்ணுவர்தன் இயக்கிய பில்லா படத்தில் நடித்த அஜீத் பின்னர் பில்லா 2-ம் பாகத்திலும் நடித்தார். இதையடுத்து ஆரம்பம், வீரம் படங்களில் நடித்தார். தற்போது கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இதுபற்றி பட இயக்குனர் கவுதம் மேனன் கூறும்போது,சூர்யா படம் இல்லை என்றதும் சிம்புவை வைத்து படம் இயக்க எண்ணினேன். அப்போது...
கேரளாவில் பரபரப்பாக பேசப்படுவது சோலார் பேனல் ஊழல். இதில் சரிதா நாயர் என்ற பெண் உள்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் சிக்கி இருக்கிறார்கள். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இதை மையமாக வைத்து சோலார் சுவப்னம் என்ற பெயரில் மல்லுவுட்டில் படம் உருவாகி இருக்கிறது. ஜாய் ஆண்டனி இயக்கி இருக்கிறார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி பட தயாரிப்பாளர் ராஜு ஜோசப் கூறும்போது, சரிதா...
அனுஷ்காவுக்கு டூப் போட்டார் ஸ்டன்ட் மாஸ்டர். டாப் ஹீரோக்களுக்கு ஸ்டன்ட் மாஸ்டர்கள் அல்லது ஸ்டன்ட் நடிகர்கள் ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் டூப் போட்டு நடிப்பார்கள். கோச்சடையான் படத்தில் ரஜினிக்காக பல காட்சிகளில் டூப் போட்டு நடித்தார் இளம் நடிகர் ஜீவா. டி.வி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் இவர் ரஜினி குரலில் மிமிக்ரி செய்தும் அவரது ஸ்டைலில் நடித்தும் வருபவர். தமிழ் தெலுங்கில் ராஜ்மவுலி இயக்கும் பாஹுபாலி படத்தில் ஆக்ஷன் காட்சிகளில்...
சிம்பு படத்தில் ஆர்வம் காட்டாத ஹன்சிகா ஜெயம் ரவி படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். இதுபற்றி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் இதுதான். வாலு படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தார் ஹன்சிகா. அப்போது ஏற்பட்ட பழக்கம் நெருக்கத்தை ஏற்படுத்தியது. ஷூட்டிங்கும் வேகமாக நடந்தது. சிம்புவுடன் ஹன்சிகாவுக்கு காதலும் மலர்ந்தது. இதற்கு ஹன்சிகாவின் தாயார் எதிர்ப்பு தெரிவித்தார். அம்மாவின் பிரஷர் அதிகரிக்கவே சிம்புவுடனான காதலை முறித்தார் ஹன்சிகா. ‘வாலுÕ பட...
மாஜி காதலன் பிரபுதேவா பெயரை கையில் பச்சை குத்தியுள்ள நயன்தாரா அதை அழிக்க முடிவு செய்துள்ளார். நயன்தாராவும், பிரபுதேவாவும் சில வருடங்களுக்கு முன் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்தனர். அப்போது பிரபுதேவாவின் ஞாபகமாக தனது இடதுகையில் அவரது பெயரை பச்சை குத்திக்கொண்டார். பின்னர் இருவரும் மனக்கசப்பு ஏற்பட்டு காதலை முறித்துக்கொண்டனர். கையில் குத்திக்கொண்ட பச்சையை நயனால் அழிக்க முடியவில்லை.   அவர் ரீ என்ட்ரி ஆகி நடிக்க வந்ததும் சில படங்களில் அந்த...
  அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பிரபல குளிர்பான நிறுவனம் கோகோ-கோலா ஆகும். இந்த நிறுவனத்தின் ஒரு தயாரிப்பான மினிட் மெய்டில் சிறிதளவே சேர்க்கப்பட்டுள்ள மாதுளை மற்றும் அவுரி நெல்லியை விளம்பரத்தில் பிரதானமாகக் குறிப்பிட்டு விலை குறைவாக விற்கப்படுவதாக சமீபத்தில் ஒரு புகார் வெளிவந்தது. அங்குள்ள மாதுளை உற்பத்தியாளர்கள் அமைப்பான 'பொம் ஒண்டர்புல்' தங்களின் தயாரிப்பை அதிக விலைக்கு விற்கின்றது. ஆனால் இந்த குளிர்பானத்தில் 85 சதவிகிதம் மாதுளை சாறும், 15...
கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களின் மீது நேற்று பின்னிரவில் பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து, அதிரடியாக தாக்குதல் நடத்தின. வசிரிஸ்தானில் உள்ள டட்டா கெல் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த 6 மறைவிடங்களின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் உஸ்பெக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த பல தீவிரவாதிகள் உள்பட சுமார் 150 பேர்...
கடந்த 1979ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து அமெரிக்காவும், பிற மேற்கத்திய நாடுகளும் அங்கு பல பொருளாதாரத் தடைகளை விதித்தன. மேலும், அவர்களின் அணுசக்தி ஆராய்ச்சியும் ஆக்கபூர்வமாக இல்லாமல் அழிவுப் பாதைக்குப் பயன்படுமோ என்ற சந்தேகம் உலக சக்தி நாடுகளுக்கு இருந்தது. இதனால் பொருளாதார மேம்பாட்டில் ஈரான் பல சிக்கல்களைச் சந்தித்து வந்தது. இந்த நிலைமை கடந்த 2013ல் ஹசன் ருஹானி அதிபர் பதவிக்கு வந்தபின்...
அமெரிக்காவின் மதிப்பு மிக்க தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சேதுராமன் பச்சநாதனை ஜனாதிபதி ஒபாமா நியமித்து உள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள விவேகானந்தா கல்லூரியில் இயற்பியல் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு படித்த சேதுராமன், பெங்களூரில் உள்ள இந்திய விஞ்ஞான கழகத்தில் (ஐ.ஐ.எஸ்.சி.) பொறியியலில் இளநிலை பட்டமும், ஐ.ஐ.டி.யில் உயர்நிலை பட்டமும் பெற்றார். கனடாவில் உள்ள ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர், கடந்த 1998-ம்...
குழந்தைத்தனமான கன்னக்குழி சிரிப்பும்... எப்போதும் கரைபுரளும் உற்சாகமுமே இவரது அடையாளங்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது, தொடர்ச்சியாக பஞ்சாப் அணியின் ஆட்டத்தை ரசித்து வந்தவர்கள், நிச்சயம் பிரீத்தியின் அழகையும் ரசித்திருப்பார்கள். பஞ்சாப் அணியின் வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தும் போதும், பந்துகளை சிக்சர்களுக்கு பறக்க விடும்போதும் மைதானத்தில் இருக்கும் கேமராக்கள் அதனை படம் பிடிக்கிறதோ இல்லையோ... நிச்சயம் பிரீத்தியின் பக்கம் திரும்பி அவரது உணர்ச்சிகரமான துள்ளல் கொண்டாட்டங்களை பதிவு செய்ய...