கிளிநொச்சி குமாரசாமிபுரம் கிராமத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி கருதி கனடா மொன்றியல் மாநிலம் விக்ரோறியா றோட் மொன்றியல் வர்த்தகர்களின் அனுசரணையுடன் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்குபடுத்தலின் கீழ் அப்பியாசக்கொப்பிகளை வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு அக்கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், மாதர் சங்க பிரதிநிதிகள்ஈ கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டுக்கழகத்தை சேர்ந்தவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என திரண்டு வந்திருந்தனர். இங்கு பா.உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேசசபையின் உறுப்பினர் புஸ்பராசா,...
பௌத்த சட்டம் தொடர்பான பேருரையாற்ற பூட்டான் பிரதம நீதியரசர் லியோன்போ சோனம் டெப்பிகியோ இலங்கைக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 10 ம் திகதி அவர் லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இந்த உரையை ஆற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய உலக சட்டத்துறையில் பௌத்த சட்டத்தை எப்படி பயன்படுத்த முடியும் என்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
பாகிஸ்தான் உளவாளி முகமது ஜாகீர் உசேன், என்பவரோடு தொடர்பு வைத்திருந்த மேலும் 2 பேர் நேற்று அதிகாலையில் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் இலங்கை, யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாட்டின் பயங்கர உளவாளி முகமது ஜாகீர் உசேன், என்பவர் கைது செய்யப்பட்டார். கியூ பிரிவு பொலிஸார் அவரை கைது செய்தனர். அவரிடம் 6 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மேதின உரையின்போது தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்தொன்று தொடர்பில் விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் தனது மேதின உரையில், 'இராணுவத்தை ஒருபோதும் வட மாகாணத்திலிருந்து எடுக்க மாட்டோம் என்று ஜனாதிபதி இறுமாப்பாகக் கூறியதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன். ஒருகாலத்தில் பிரபாகரனும் கேட்பாரின்றி அதிகாரத்தில் இருந்தார். அதை ஜனாதிபதி அறியாதவர் அல்ல. அப்படியாயிருந்தும் இப்படியான சவாலான கருத்துக்களை அவர் ஏன் முன்மொழிகின்றார்...
சிறை தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக பெண்மணி ஒருவர் கடந்த பத்து ஆண்டுகளில் 14 முறை கர்ப்பம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள க்ஸிங்ஜியாங் மாகாண தலைநகரான உரும்கி பகுதியை சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு ஊழல் வழக்கில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையில் இருந்து தப்பிக்க, தான் கர்ப்பமாக இருப்பதாக அப்போதைய நீதிபதியிடம் அந்தப் பெண் தெரிவித்தார். அந்நாட்டு சட்டங்களின்படி, கர்ப்பிணிப் பெண்களை சிறையில் அடைப்பது முறையில்லை...
இலங்கை ஏதேச்சாதிகாரத்தை நோக்கி நகர்வதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை ஏதேச்சாதிகாரம் நோக்கி நகர்ந்த போதிலும், தேர்தல்கள் நடத்தப்படுவது வரவேற்கப்பட வேண்டியதென அமெரிக்க உதவித் திட்டத்தின் ஆசிய பிராந்திய வலய பதில் துணை நிர்வாக அதிகாரி டெனிஸ் ரோலீன்ஸ் தெரிவித்துள்ளார். பெரும் எண்ணிக்கையிலான இடம்பெயர் மக்கள் சொந்த இடங்களில் அல்லது அதற்கு அருகமையில் குடியேறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சிவில் சுதந்திரம் மற்றும் நல்லிணக்கம் ஆகியன தொடர்பில் அமெரிக்க உதவித் திட்டம் தொடர்ந்தும்...
மன்னார் சின்னப்பண்டிவிரிச்சான் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கநாதன் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். மன்னார் சின்னப்பண்டிவிரிச்சான் பகுதியில் கடந்த 29 ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் வீசிய மினி சூறாவளியால் அப்பகுதி வாழ் மக்களின் வீட்டுக்கூரைகள் வாழைத்தோட்டங்கள் என்பன சேதமடைந்துள்ளன. இந்த சேத விபரங்களை சம்பந்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளோ, அரச...
ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்தின், தொழிலாளர்களின் தினமாக கொண்டாடப்படுகின்றது. இன, மத, மொழி, நாடு என்ற யாதொரு வேறுபாடுமின்றி உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, ஒற்றுமையைப் பறைசாற்றும் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில் யேர்மன்வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்களும் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வை  வெளிநாட்டவர்களின் நிகழ்வுடன் இணைந்து நேற்று வியாழக்கிழமை யேர்மனியில்  பல நகரங்களில் (Berlin, Bremen, Hamburg, Stuttgart, Düsseldorf,Göttingen, Saarbrücken, Frankfurt )மிகவும்...
நல்லூர் பிரதேச சபையினால் சுமார் 19.5 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கொக்குவில் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதியும் மற்றும் கடைத் தொகுதியும் இன்று காலை 8.00 மணியளவில் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவினாலும் திறந்து வைக்கப்பட்டது. நல்லூர் பிரதேச சபையின் தலைவர் ப.வசந்தகுமார் தலைமையில நடை பெற்ற இந்நிகழ்வில் பெயர்ப் பலகையை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான...
  நீதியானதும் சுதந்திரமானதுமான  தேர்தலொன்று   நடைபெறுமானால்  தற்போதைய  ஆட்சியாளர்கள்  நாட்டைவிட்டு  தப்பியோட  வேண்டிய  நிலை வரும். பீரங்கிகளைத்  தொட்டு சுட்டுப்பழகியவர்கள்  நாம், விளையாட்டு  துப்பாக்கிகளுக்கு  அஞ்சப்போவதில்லை என  ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள்  இராணுவத்தளபதியுமான  சரத் பொன்சேகா  தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை  புத்ததாஸ மைதானத்தில்  ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது  மேதினக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய  முன்னாள்  இராணுவத்தளபதியும்  ஜனநாயகக் கட்சித் தலைவருமான  சரத் பொன்சேகாவே  இவ்வாறு தெரிவித்தார். இங்கு...