ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது இன்றைய தினத்திலாகும்.
Thinappuyal News -0
ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் இராணுவத்தினரின் ஆனையிறவுப் படைத்தளம்
சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ வல்லுநர்களாலும் “வீழ்த்தப்பட முடியாத தளம்” என்று கருதப்பட்டதே ஆனையிறவு இராணுவப் படைத்தளம். அதேநேரம் அத்தளம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளாகுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டே வந்தது.
1999இன் நடுப் பகுதியில் அப்போதைய இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க, “புலிகள் ஆனையிறவைத் தாக்குவார்களென்பது எமக்குத் தெரியும். நாங்கள் சகல ஆயத்தங்களுடனுமே இருக்கிறோம்” என்று ஓர் ஊடகத்துக்குச் சொன்னார்.
ஆனையிறவு...
இலங்கையின் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்வியாளர்களை சர்வதேச மட்டத்தில் தரமுயத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக கல்வியாளர்கள் மத்தியில் சுற்றுநிருங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் இந்த திட்டத்தை இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் வரவேற்றுள்ளது.
இந்த சுற்றுநிருபங்கள் இந்த மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருகின்றன.
உதவி விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள் ஆகியோர் கட்டாயமாக முதுமாணி அல்லது கலாநிதி பட்டயங்களை கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட...
வடக்கில் உள்ள அனைவரும் புலிகளே. புனர்வாழ்வு வழங்கினாலும் புலித் தீவிரவாதிகளின் கொள்கையை அழிக்க முடியாது என்று குற்றம் சுமத்திய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வடக்கில் உள்ள அனைத்து புலிகளையும் கொன்று குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
வடக்கில் புலிகள் மீள உருவாகி வருவதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்படும் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விடுதலைப் புலி தீவிரவாதிகள்...
இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இணக்கம் ஒன்றை எட்ட வைப்பதற்கு தென்னாபிரிக்கா எடுத்து வரும் முயற்சிகளில் சிக்கல் தோன்றியுள்ளது.
தென்னாபிரிக்கா பக்கச் சார்பாக நடக்க முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் அரச தரப்பினரிடம் திடீரென ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைதி முயற்சிகளில் ஒரு மூன்றாம் தரப்பாக ஈடுபடுமாறு தென்னாபிரிக்காவுக்கு இலங்கை அரசே அழைப்பு விடுத்திருந்தது.
கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின்...
கனேடிய தமிழர் பேரவையின் செயற்பாட்டாளர் ஒருவரிடம் தினப்புயல் பத்திரிகை தொலைபேசியில் செவ்வி கண்டபோது…
Thinappuyal -
பதினாறு புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்டு அவர்களது பெயர்ப்பட்டியல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் கனேடிய தமிழர் பேரவையின் செயற்பாட்டாளர் ஒருவரிடம் தினப்புயல் பத்திரிகை தொலைபேசியில் செவ்வி கண்டபோது...
கேள்வி :- இலங்கை அரசாங்கத்தினால் 16 புலம்பெயர் நாட்டின் அமைப்புக்கள் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கனே டியத் தமிழர் பேரவையும் ஒன்றாகும். இந்நிலையில் இலங்கையின் இத்தடை அறிவிப்பானது கனடாவில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது?
பதில்:- இலங்கைத் தமிழ்மக்களுக்கு ஆதரவாகக் குரல்...
பொய்யர்களே இந்த அரசாங்கத்தில் உள்ளனர் என்றும் சாத்தானை விட பெரிய சாத்தான் கூட சொல்லாத பொய்களை அரசு கூறுகின்றது என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்த உண்ணா நோன்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போது இலங்கையில் நடக்கும் விடயங்களே நடந்து கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்களுக்கு இருட்டில் இருந்து...
தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் வெவ்வேறான பரிணாம வடிவில் விடுதலைப்புலிகளின் போராட்டங்கள் உருவெடுத்தன. அந்தவகையில் 1983 தொடக்கம் 1989 ஆம் ஆண்டுவரை 1ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. ஆரம்பத்தில் கொரில்லாப்போர் நடவடிக்கையாகவே ஆரம்பித்தது. அக்காலகட்டத்தில் வாகனங்களுக்குப் பதிலாக துவிச்சக்கரவண்டிகளை பயன்படுத்தினர். இப்போரானது காடுகளிலும், வீடுகளிலும் தாக்குதல் நடத்தும் போர்பொறிமுறையாக இருந்தது.
விடுதலைப்புலிகளின் 2ம் கட்ட ஈழப்போரானது 1992-1994 வரை. தரைமார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் இவர்களுடைய படைநடவடிக்கைகள் வலுப் பெற்றிருந்தன. 3ம்...
இலங்கையில் ATM அட்டை இயந்திரம் மூலம் ஒரே நாளில் அதிக பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி கொமர்ஷல் வங்கி சாதனை படைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதுவருடப் பிறப்பை அண்மித்த காலப் பகுதியில் அதாவது ஏப்ரல் 11ம் திகதி வெள்ளிக்கிழமை மட்டும் நாடெங்கும் உள்ள தனது 585 ATM இயந்திரம் மூலம் 205 கோடி ரூபாவை தனது வாடிக்கையாளர்களுக்கு கொமர்ஷல் வங்கி வழங்கியிருக்கின்றது.
இது ஒரே நாளில் அதிக தொகை என்ற அதே வங்கியின் கடந்த...
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் கிளி. கூட்டுறவு சபை மண்டபத்தில் இணைத்தலைமைகளான வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சுரேஸ் பிரேமச்சந்திரன், சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரகுமார், அலன்டீலன், வடமாகாணசபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள், கிளிநொச்சி கரைச்சி பிரதேசபையின்...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளின் போது சாட்சியமளிக்கத் தயார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பிடகோட்டே பிரதேசத்தில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து பாதுகாப்புப் படையினரையும் பாதுகாக்கத் தயார் எனவும்இ ஜனாதிபதியின் குடும்பத்தை பாதுகாக்கத் தயாரில்லை எனவும் அவர்...