ஆளுநர் செயலகத்தில் கைகலப்பு; ஊழியர் வைத்தியசாலையில்

150

 

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் ஏற்பட்ட கைக்கலப்பில் ஒருவர் கழுத்தில் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண ஆளுநரின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தின் அலுவலக பணியாளர் ஒருவருடன், துப்பரவுப் பணியில் ஈடுபடும் நபர் ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆளுநர் செயலக பணியாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளி யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE