இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடிலெய்டில் நடைபெறும் உலககிண்ணப் போட்டிக்கான டிக்கெட்கள் 12 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

399

 

இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடிலெய்டில் நடைபெறும் உலககிண்ணப் போட்டிக்கான டிக்கெட்கள் 12 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

50,000 பேர் அமர்ந்து பார்க்ககூடிய கொள்திறன் கொண்ட அடிலெய்ட் மைதானத்தில் பெப்ரவரி 15, 2015 அன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதற்கான டிக்கெட் தொடங்கிய சில நிமிடங்களில் முடிவடைந்தன.

மேலும், இந்த போட்டியை காண இந்தியாவிலிருந்து 20,000 ரசிகர்கள் அவுஸ்திரேலியா வருகை தருவதாக அடிலெய்ட் மைதான நிர்வாகி தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ண போட்டித் தொடரின் 2வது நாள் இந்தப் போட்டி நடைபெறுவதால் பெப்ரவரி 15ம் திகதியன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டி, ரசிகர்களுடன் மைதானமே களைகட்டவுள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அடிலெய்ட் மைதானத்தில் மட்டும் மொத்தம் 4 உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறுகிறது. உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE