உலக கோப்பை கபடி போட்டி: மதுரையில் அடுத்த ஆண்டு நடக்கிறது

406
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக செயற்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சோலை எம்.ராஜா தலைமை தாங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகமும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து முதல்முறையாக இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்பட 20 நாடுகள் பங்கேற்கும் ‘அம்மா உலக கோப்பை கபடி-2015’ போட்டியை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்திகதி முதல் மார்ச் 1-ந்திகதி வரை நடைபெறும். இதையொட்டி தமுக்கம் மைதானத்தில் உலகத்தரம் வாய்ந்த 4 மைதானங்கள் அமைக்கப்படுகின்றன. அந்த மைதானங்களில் செயற்கை கூரை அமைக்கப்பட்டு, சுமார் 10 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டிகளை கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்

SHARE