ஐ,நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு சில நாடுகள் ஆதரவு

387

 

இலங்கை குறித்த ஐ.நாவின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு சில நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஐ.நாவின் உறுப்புரிமை கொண்ட ஜப்பான், அமெரிக்கா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் அறிக்கை பிற்போடப்பட்டமைக்கு ஆதரவளித்துள்ளன.

idp_army ltte-w2 xin_08205061707017031045521

ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரவதிவிடப் பிரதிநிதி காரியாலயம் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு இது குறித்து கால அவகாசம் வழங்க வேண்டும் என அந்த நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த, ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விசாரணை அறிக்கை அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவிருந்தது.

எனினும் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க, குறித்த அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது.

SHARE