ஒரு வழியாக பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் த்ரிஷா. ‘வெளிவந்தந் பல தவறான ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். சிங்கிளாக சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று டுவீட் செய்திருக்கிறார் த்ரிஷா.
வருண்மணியனுடனான காதல் முறிந்துவிட்டது என சொல்லிவிட்டு தனது வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார். உண்மையிலேயே திருமணம் இல்லையென்று அறிவித்த பிறகு தான் த்ரிஷாவிற்கு அதிக பட வாய்ப்புகள் வந்திருக்கின்றன.
செல்வராகவனுடன் ஒரு படம், சுந்தர்.சியுடன் ஒரு படம் என த்ரிஷா காட்டில் மழைதான். ஆனால் அவருடைய முன்னாள் காதலன் வருண்மணியனோ கோபத்தில் கொப்பளித்துக்கொண்டிருக்கிறார் டுவிட்டரில்.
அதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டாமல் ‘நான் சிங்கிள்’ என சொல்லிவிட்டு த்ரிஷா வழக்கம் போல கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, எழுதிய டுவீட்களையெல்லாம் அழித்துக்கொண்டிருக்கிறார் வருண். ஒரே டுவீட்டில் வருணின் அத்தனை டுவீட்களையும் அழிக்க வைத்துவிட்டாரே த்ரிஷா என்ற வியப்பில் கோடம்பாக்கம்