கிளிநொச்சியில் வாய்த்தர்க்கத்தினால் நடந்த விபரீதம்

124

 

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில் இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீட்டின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (02.04.2024) இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் விசாரணை
கிளிநொச்சி, உழவனூர் பகுதியில் இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தக்கம் காரணமாக வீட்டு உரிமையாளர் இல்லாத சமயத்தில் வீட்டின் ஒரு அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் புடவைகள் அனைத்தும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிள்ளைகளுக்கு சமைத்து வைத்த மதிய உணவிலும் விஷமிகளினால் விஷம் கலக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SHARE