“சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு இன, மதங்களுக்கிடையே ஒற்றுமையை உறுதிசெய்யும் சமாதானம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த செளபாக்கியம் மிக்க புத்தாண்டாகஅமையப் பிரார்த்திக்கின்றேன்.” – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

367

 

“சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு இன, மதங்களுக்கிடையே ஒற்றுமையை உறுதிசெய்யும் சமாதானம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த செளபாக்கியம் மிக்க புத்தாண்டாகஅமையப் பிரார்த்திக்கின்றேன்.” – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- “சமாதானம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த செளபாக்கியம் மிக்க புத்தாண்டாக அமையப் பிரார்த்திக்கின்றேன். இது வசந்த காலம். இன,மத பேதமின்றி நாம் அனைவரம் இலங்கையர் என்ற மனோநிலையில் சூரிய திருநாளைக் கொண்டாடும் எழில்மிகு சந்தர்ப்பம் இதுவேயாகும். சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு இலங்கை மக்களின் மிக முக்கியமான கலை, கலாசாரப் பண்டிகையாகும். தொன்றுதொட்டு இயற்கையுடன் ஆன்மிக ரீதியாகப் பின்னிப்பிணைந்து உழவுத் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்வதற்குப் பழக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு புத்தாண்டு என்பது தேசிய ஒற்றுமை,சகோதரத்துவம், சமத்துவம், மகிழ்ச்சி, செளபாக்கியம் என்பவற்றை விருத்தி செய்யும் தேசியத் திருநாள்.

புதியதொரு கலாசாரத்திற்குள் காலடி எடுத்துவைத்து புத்தாண்டு பிறந்துள்ளது. இன, மத, கட்சி பேதங்களைப் புறந்தள்ளிவிட்டு இலங்கை சமூகம் என்ற உணர்வுடன் வருங்காலத்தை எதிர்பார்த்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அழுத்தங்கள் மற்றும் கட்டுப்பாட்டு உணர்வுகளில் இருந்து மீண்டு புத்தாண்டைக் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தமையானது மிக முக்கியமான விடயமாகும். சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு இன, மதங்களுக்கிடையே ஒற்றுமையை உறுதிசெய்யும் சமாதானம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த செளபாக்கியம் மிக்க புத்தாண்டாக அமையப் பிரார்த்திக்கின்றேன்

SHARE