மாவை சேனாதிராசா அவர்களின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. தமது சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராசா என அழைக்கப்பட்டார். யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார். வீமன்காமம் பாடசாலையில் ஆரம்ப கல்வியும் நடேஸ்வராக் கல்லூரியிலும் உயர்தரக்கல்வி கற்ற பின்னர், இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார். அரசியலில்… இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை...
  தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி ஓரணியில்! பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இச்சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், அனுராத ஜயரத்ன, சாணக்கியன, ஜே.சி. அலவத்துவல, அஜித் பி. பெரேரா, ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர்...
  திசைகாட்டி ஆட்சிக்கு வந்து 114 நாட்களே... என்ன செய்தார்கள்... தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்ற பின்னர் 2025 ஜனவரி 14 ஆந் திகதியளவில் கழிந்த 114 நாட்கள் காலப்பகுதியில் நிகழ்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு அளித்த அரசியல், கலாசார, சமூக மற்றும் பொருளாதார வெற்றி பற்றி சுருக்கமாக அசைபோட்டுப் பார்ப்போம். 01. ஜனாதிபதி வெற்றிபெற்ற பின்னர் நடைபெற்ற உறுதிப்பிரமாணம் செய்கின்ற வைபவம் பண...
  அர்ச்சுனா இராமநாதன் எம்.பி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி நகரசபை வளாகத்திற்குள் வைத்து இன்று  பிற்பகல் அர்ச்சுனா எம்.பி அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம் போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் அண்மையில் தொடுக்கப்பட்ட வழக்கினை காரணம் காட்டியே பொலிஸார் அவரை கைது செய்திருப்பதாக தெரிய வருகிறது. சாவகச்சேரி நகரசபை அதிகாரிகளுடன் வர்த்தக நிலைய குத்தகை தொடர்பாக கலந்துரையாட வந்த நிலையிலேயே அவர்...
  தமிழ்நாடும் ஈழமும் மொழியாலும் பண்பாட்டினாலும் ஒன்றுபட்ட நிலங்கள். உணர்வால் மாத்திரமின்றி தொன்மையான வரலாறு வழியாகவும் தமிழ்நாடும் ஈழமும் தாயும் சேயுமாக கருதப்படுகிறது. நிலவமைப்பிலும் தமிழ்நாட்டின் குழந்தையாகவே இருக்கிறது ஈழம். இந்த வரலாற்றுப் பின் பின்புலத்தில் தான் ஈழப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் கரிசனை அதிகமாகக் காணப்பட்டது. இலங்கையில் கடுமையான இன ஒடுக்குமுறை சூழல் தலைவிரித்தாடிய நிலையில் இந்தியாவின் தலையீடும் உதவியும் தேவை என்பதை தமிழ்நாடும் ஈழப் போராளிகளும் வலியுறுத்தியிருந்தனர். தனி ஈழம் இதனால்தான் ஒரு கால...
  அரிசித் தட்டுப்பாட்டுக்கும் விலையேற்றத்திற்கும் கடந்தகால அரசாங்கங்களே காரணம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் குற்றச்சாட்டு கடந்த காலத்தில் இருந்த அரசாங்கங்கள் இவ் நெல்வினை சேமித்து வைத்து உரிய பொறிமுறையின் கீழ் மக்களிற்கு அரிசியினை விநியோகிப்பதற்கான செயன்முறையினை மேற்கொண்டிருந்தால் இவ்வகையான தட்டுப்பாடுகளும், விலை அதிகரிப்பும் ஏற்பட்டிருக்காது. எதிர்வரும் காலங்களிலே இவ்வகையான தட்டுப்பாடு ஏற்படாது என்பதுடன், அதற்கான நடவடிக்கையினை நாங்கள் ஏற்படுத்தி இருக்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட...
    பாறுக் ஷிஹான் காரைதீவு பிரதேசத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (27)  பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும்   பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா  தலைமையில் பிரதேச செயலாளர்  நெறிப்படுத்தலின்  ஆரம்பமானது. இதன் போது  பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை,  அஷ்ரப் தாஹிர்,  க. கோடீஸ்வரன், மற்றும் திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டு தங்களது ஆக்க...
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் நாட்டின் கௌரவ பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கலாநிதி. ஹரினி அமரசூரிய அவர்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று  பிரதமர் காரியாலயத்தில் நடைபெற்றது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச் செயலாளர், உதவிப் பொதுச் செயலாளர், உப குழுக்களின் செயலாளர்கள், உறுப்பினர்கள் சிலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். குறித்த சந்திப்பில்,...
  எஸ்.எம்.முபீன், அபு அலா கடந்த சில நாட்களாக திருகோணமலை மாவட்டத்தில் தொடராக பெய்து வந்த அடைமழை காரணமாக நிலாவளி கடற்கரையோரங்களில் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இளைப்பாறும் இடங்கள் சேதமடைந்து காணப்பட்டன. இதனை மாற்றியமைக்கும் "கிளீன் சிறிலங்கா" பணிகள் மற்றும் கடற்கரை ஓரங்களை துப்பரவு செய்யும் சிரமதானம் இன்று (25) முன்னெடுக்கப்பட்டது. வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மிக அதிகமாக விரும்பி வருகின்ற இடமாக திருகோணமலை -...
  யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் நாடாளுமன்றத்தில் சிறீதரன் சுமந்திரனுக்கு எதிராக உரையாற்றியிருக்கிறார். கட்சியின் உள் முரண்பாடு நாடாளுமன்றத்திலும் பிரதிபலித்திருக்கின்றது. ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வைத்து முறைப்பாடு செய்வது அநேகமாக இதுதான் முதல் தடவையோ தெரியவில்லை. விமான நிலையத்தில் சிறீதரன் சிறிது நேரம் மறித்து வைக்கப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும். அதேசமயம் அது தொடர்பாக சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களுக்கு...