அமெரிக்காவை சேர்ந்த பிரபல நீச்சல் பந்தய வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் 18 தங்கம் உள்பட 22 பதக்கங்களை ஒலிம்பிக் போட்டியில் வென்று சாதனை படைத்தவர். அத்துடன் உலக போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளை படைத்து இருக்கிறார். 2012–ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெற்ற 28 வயதான மைக்கேல் பெல்ப்ஸ் மீண்டும் நீச்சல் களத்துக்கு திரும்பி இருக்கிறார். அமெரிக்காவில் உள்ள ஷார்லொட்டில் நடந்த கிராண்ட்பிரீ நீச்சல் போட்டியில்...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் வஹாப் ரியாஸ், அப்துல் ரசாக், பவாத் ஆலம், நசிர் ஜாம்ஷெட், ஷாகெப் ஹாசன் ஆகியோர் கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த பிரன்ட்ஷிப் கோப்பை 20 ஓவர் போட்டியில் கலந்து கொண்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி பெறாமல் 5 பேரும் இந்த போட்டியில் கலந்து கொண்டது சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து விசாரணை நடத்திய 3 பேர் கமிட்டி முன்பு 5 வீரர்களும்...
தெற்காசிய கூடைப்பந்து போட்டியில் இந்திய ஆண்கள் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தெற்காசிய கூடைப்பந்து 3–வது தெற்காசிய ஆண்கள் சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப்போட்டி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்தது. இதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, மாலத்தீவை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இந்திய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் மாலத்தீவு அணி திணறியது. இந்திய அணி சாம்பியன் முதல் பாதியில் 64–16...
ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கப்பதக்கம் வென்றவரும் உலக சாதனையாளருமான அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் தடகள வீரர் கார்ல் லீவிஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘ஊக்க மருந்து பயன்படுத்தி சோதனையில் சிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லை. அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். அத்துடன் ஊக்க மருந்து சோதனையை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
  தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான உலக பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதில் சாய்னா, காஷ்யாப் தலைமையில் இந்திய அணிகள் பங்கேற்கின்றன. உலக பேட்மிண்டன் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக ஆண்கள் (தாமஸ் கோப்பை) மற்றும் பெண்கள் (உபேர் கோப்பை) அணிகளுக்கான பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 25–ந் தேதி வரை நடக்கிறது. போட்டி  3 ஒற்றையர் மற்றும் இரண்டு இரட்டையர் ஆட்டங்களை...
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்காக முதல்&அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் ஆர்.சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் இணைந்து  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் இயக்கத்தை நல்ல முறையில் வழி நடத்தி சென்று, தமிழக மக்களின் நல்வாழ்வில் அக்கறை செலுத்தி, தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய ஒரே தலைவி ஜெயலலிதா தான் என்பதை நிரூபிக்கும்...
நடிகை பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை சினிமாவாக உருவாகுவதாக ஒரு பரபரப்புத் தகவல் பாலிவுட்டில் உலா வருகிறது. அது உண்மையாக இருந்தால் அவரது வாழ்க்கை ரகசியங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படி வெளிச்சத்துக்கு வருவது அவரது பொதுவாழ்க்கைக்கு ஏற்றமாக இருக்குமா? இறக்கமாக இருக்குமா? ‘நடிகை அல்லவா, அவரது புகழுக்கான விஷயங்களை மட்டும் படத்தில் சேர்ப்பார்!’ என்று ரசிகர்கள் சொல்லாமல் சொல்வது ஒருபுறம் இருந்தாலும், இதுபற்றி பிரியங்கா சோப்ரா என்ன சொல்கிறார்?! “என்னைப் பற்றி...
 அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ராணுவ தலைமைத் தளபதிகள் அமெரிக்காவில் சந்தித்துப் பேசினர். அமெரிக்க ராணுவ கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி மார்டின் டெம்ப்ஸி மற்றும் சீன ராணுவத்தின் தலைமைத் தளபதி ஃபாங்க் ஃபெங் ஹூய் ஆகிய இருவருக்கும் இடையேயான சந்திப்பு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது இருநாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்சினைகள் பிராந்தியப் பிரச்சினைகள் மற்றும் தெற்கு மற்றும் கிழக்கு சீனக்...
இந்தோனேஷியா சுமத்ரா தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி இந்தோனேஷியா சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரை நகரம், பந்த ஏஸெ, நகரில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் 9 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் உள்ளூர் நேரப்படி காலை...
நியூயார்க் நகரில் நேற்று சனிக்கிழமை வருடாந்திர நடன அணிவகுப்பு கொண்டாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் உள்ள 70 வகையான நடனங்கள் இதில் ஆடப்பட்டது. ஏராளாமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.