வெளிவிவகார செயற்பாடுகளை இராஜதந்திர ரீதியில் நகர்த்தும் தேசியப் பட்டியல் சுமந்திரன்
Thinappuyal News -0
அண்மைக் காலமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் வெளிவிவகாரங்களின் திட்டங்களை அறிந்து அதற்கேற்ப தனது இராஜதந்திர நகர்வைக் கொண்டுசெல்கின்றார். காரணம் அவர் ஒரு சட்டத்தரணி மட்டுமல்லாது அரசியலில் சிறந்த பேச்சாளராகவும் திகழ்கின்றார். இவரைப் பற்றி அண்மைக்காலமாக இணையத்தளங்களில் அரசாங்கத்தின் கைப்பொம்மையாகச் செயற்படுகின்றார் என செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனாலும் தமிழரசுகட்சியின் சட்ட திட்டங்களுக்கமைய சுமந்திரன் அவர்களுடைய செயற்பாடுகள் நகர்த்தப்பட்டு வருகின்றன.
அண்மையில் வவுனியா நகரசபை மண்டபத்தில்...
‘ நடேசன்,புலித்தேவனை சிங்கள ராணுவம் கொண்டதற்குரிய புதிய ஆதாரம் ஆஸ்திரேலியா வெளியிட்டது
Thinappuyal News -
இலங்கை இறுதிக்கட்ட போரின் போது விடுதலை புலிகள் அரசியல் பிரிவு தலைவர் நடேசன்,தளபதி புலித்தேவன், கேனல் ரமேஷ் உள்ளிட்டோர் சிங்கள ராணுவத்திடம் சரண் அடைந்தனர்.அவர்கள் அனைவரையும் சிங்கள படையினர் சித்ரவதை செய்து பின்னர் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக புதிய ஆதாரங்களை ஆஸ்திரேலியாவில் உள்ள அரசு சாரா நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இலங்கை இறுதிக்கட்ட போரின் போது அங்கிருந்த தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவரும், ஆசிரியர் ஒருவரும்...
ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்சுவா க்ரேபேவ் அடுத்த மாதம் இலங்கைக்குள் நுழைகிறார் என ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிவித்துள்ளது. நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதியில் அரசபடைகள் இழைத்த மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பை கடந்த மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது, நவீப்பிள்ளை தலைமையிலான மனித உரிமைப்பேரவையிடம் கையளிக்கப்பட்டதன் தொடர் நிகழ்வாகவே இந்த விஜயமும் அமைந்துள்ளது. பிரான்சுவா கிரேபேவ்,...
இலங்கை வந்த பாகிஸ்தானின் இராணுவ குழு கடந்த திங்கட்கிழமைஇன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது. குறித்த குழுவினரை இலங்கை இராணுவத்தினர் அழைத்துச் சென்று யாழ்.கோட்டைப் பகுதியை காண்பித்தனர்.
பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவினரே இந்தப் பயணத்தில் இடம்பெற்றிருந்தனர். தாம் பல்வேறு நாடுகளுக்கும் இவ்வாறான பயணங்களில் ஈடுபட்டுவருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்தக் குழுவினர் யாழ்.கோட்டைப் பகுதியை பார்வையிட்டதன் பின்னர் யாழ். துரையப்பா மைதானத்திலிருந்து உலங்கு வானூர்தியில் புறப்பட்டுச் சென்றனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகள் பலர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் தளமிட்டிருப்பதாக புலனாய்வுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரபாகரனுடைய தலைமைத்துவம் அல்லாது விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களை வைத்து மீளவும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இலங்கையரசிற்கு ஒருபக்கம் ஆதரவை தெரிவிக்கும் அமெரிக்கா மறுபுறத்தில் எதிர்ப்பையும் காட்டிவருகிறது. ஜெனிவாத் தீர்மானத்தின் போதும் தமிழ் மக்களுக்காதரவாக அமெரிக்க அரசு செயற்பட்டுவந்தது. அமெரிக்க அரசானது தனது சுயநலத்திற்காக விடுதலைப்புலிகளை...
பௌத்த மதம் பற்றி கற்பிக்க வேண்டிய நீங்கள் இவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது- அசாத் சாலி
Thinappuyal News -
முஸ்லிம் மக்கள் பற்றி முன்னெடுத்து வரும் பிரசாரம் சம்பந்தமாக தன்னுடன் பகிரங்க நேரடி விவாதத்திற்கு வருமாறு தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, பொதுபால சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
பொதுபல சேனா அமைப்பு கடந்த ஒன்றரை வருடங்களாக முஸ்லிம் மற்றும் ஏனைய சிறுபான்மை மதங்களுக்கு எதிராக முன்னெடுத்து பகையான வேலைத்திட்டங்கள் தொடர்பில் மிகவும் உன்னிப்பாக...
நிர்மாணம், இயக்கம் மற்றும் மாற்றுகை (பிஓடி) என்ற திட்டத்தின் வடக்குக்கான அதிவேக பாதை அமைப்புக்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இது தொடர்பில் தற்போது சீன நிறுவனம் ஒன்றுடன் பேச்சுக்கள் இடம்பெறுவதாக பெருந்தெருக்கள் துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் பிரேமஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இந்த பாதை தம்புள்ளையில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. இந்தப்பாதை எந்தரமுல்ல என்ற இடத்தில் இருந்து ஆரம்பிக்கும். அத்துடன் கொழும்பின் சுற்றுப்புற பாதைகளான கம்பஹா, மீரிகம, குருநாகல் முதல் தம்புள்ளை ஆகிய இடங்களில் வெளியேறும்...
இலங்கை இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் பெண்கள், தாதியர் பயிற்சி நெறிறை வெற்றிக்கரமாக முடித்துக்கொண்டதாக இராணுவத்தின் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சிப்பெற்ற 10 தமிழ் பெண்களுக்கு அண்மையில் கிளிநொச்சி இராணுவ படைத்தளத்தில் வைத்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
குறிப்பாக இந்த பயிற்சியின்போது தமிழ்பெண்களுக்கு முதலுதவிகள், சத்திரசிகிச்சையின் போது மேற்கொள்ளப்படும் உதவிகள், முகாமைத்துவம் உள்ளிட்ட பல விடயங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன.
இதன்போது பயிற்சிகளில் சிறப்பாக செயற்பட்ட ஆர்.இன்சார், பி.சிபோரா மற்றும் பி.பிரிசில்லா ஆகியோருக்கு விருதுகளும் வழங்கப்பட்டதாக இராணுவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது