நடிகை புகார்: உலகக்கோப்பை போட்டி அணியில் இடம்பெற்ற வங்காளதேச வீரருக்கு ஜெயில்

352
வங்காளதேச கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர் ருபேல் ஹொசைன். இவர் விரைவில் நடைபெற இருக்கும் உலக்கோப்பை போட்டியில் விளையாட இருக்கும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளளார். இந்நிலையில் நடிகை ஒருவர் அளித்த புகார் அடிப்படையில் அவருக்கு டாக்கா நீதிமன்றம் ஜெயில் தண்டனை வழங்கியுள்ளது.

திருமணம் செய்வதாக பொய்யான வாக்குறுதி கொடுத்து ருபேல் ஹொசைன் தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை ஒருவர் மிர்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதில் தன்னை கைது செய்யாமல் இருக்க கடந்த மாதம் 15-ந் திகதி ருபேல் முன்ஜாமீன் பெற்றிருந்தார்.

விசாரணைக்காக இன்று அவர் டாக்காவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, தனது ஜாமீனை நீடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், டாக்கா மெட்ரோபோலிடன் நீதிபதி, ஜாமீனை நீட்டிக்க மறுத்ததுடன் ருபேலை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

உலகக்கோப்பை போட்டி அணியில் இடம்பெற்றுள்ள இவரது எதிர்காலம் என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஜனவரி 24-ந்திகதி ஆஸ்திரேலிய செல்ல அவர் வரவில்லையென்றால், அவருக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படுவார்.

SHARE