வேலூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நளினி முருகன் இருவருக்குமிடையே இன்று சந்திப்பு இடம்பெற்றது.
வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நளினி – முருகன் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி நளினி – முருகன் இன்று சந்தித்து பேசினர்.
காலை 7.30 மணிக்கு ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகனை பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு இருவரும் 8 மணிவரை ½ மணிநேரம் சந்தித்து பேசினர்.
டி.எஸ்.பி. பன்னீர்செல்வம் தலைமையிலான பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.