பா உ அர்ச்சுனா தமிழ்ப் பெண்களின் சாபக்கேடு: கட்டிய மனைவி முதல் பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த பா உ அர்ச்சுனா !

33
பா உ அர்ச்சுனா தமிழ்ப் பெண்களின் சாபக்கேடு: கட்டிய மனைவி முதல் பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த பா உ அர்ச்சுனா !
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் கடந்த காலங்கள் கசிய ஆரம்பித்துள்ளது. பெண்களை மிகக் கேவலமாக நடத்தும், அவர்களைக் கீழானவர்களாகக் கருதும் தனது யாழ்ப்பாண வெள்ளாள மேட்டுக்குடிஆணாதிக்க பொதுப் புத்தியை அர்ச்சுனா நாட்டின் உயரிய சபையில் வெளிப்படுத்தி அதற்கான தண்டனையையும் பெற்றார். சாவகச்சேரி மருத்துவமனையில் எழுந்த பிரச்சினையை வைத்துக்கொண்டு ஒரு சைக்கோலொஜிக்கல் திரில்லர் ட்ராமா ( psychological thriller drama ) அதாவது உளவியல் ரீதியான விறுவிறுப்பு நாடகத்தை அரங்கேற்றினார். மக்களின் கவனத்தை அர்ச்சுனா தன்பக்கம் திருப்பினார். தமிழ் தேசியத் தலைமைகளால் கடந்த 15 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்ட மக்களுக்கு அர்ச்சுனா ஒரு மீட்பராக கதாநாயகனாக மாறினார். மருத்துவத்துறையிலிருந்த பிரச்சினைகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியே போட்டுடைத்தார். பல மருத்துவத்துறை ஊழல்கள் அம்பலமாகியது. அந்த அடிப்படையில் தேசம்நெற் உம் அர்ச்சனாவின் போராட்டத்திற்கு வழங்கியது.
வடக்கின் மருத்துவத்துறை உலுப்பி எடுக்கப்பட்டது. ஆனால் அர்ச்சுனாவால் வெளிக்கொண்டுவரப்பட்ட எந்தப் பிரச்சினைக்கும் அர்ச்சுனாவிடம் எவ்வித தீர்வும் இருக்கவில்லை. அர்ச்சுனாவிடம் முறையான ஆதாரங்களும் இருக்கவில்லை. ஆனால் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை மக்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால் அவர்கள் அதனை ஒரு மருத்துவ சுப்பிரிண்டன்ட் சொல்கின்றபோது அது வலுப்பெற்றது. அர்ச்சுனாவின் இந்த உளவியல் விறுவிறுப்பு நாடகத்தின் மூலம் மருத்துவத்துறையிலிருந்த அர்ச்சுனாவுக்கு எதிராகச் செயற்பட்ட ஊழல்வாதிகள் அம்பலமாகினர். அர்ச்சுனா மிகச்சாதுரியமாகத் திட்டமிட்டு அவர்களை பொதுமக்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் வைத்துத் தண்டித்தார். தென்மராட்சி அபிவிருத்தி அமைப்பு வழங்கிய நிதிதொடர்பில் அர்ச்சுனா வைத்த குற்றச்சாட்டையே சில தினங்களில் அர்ச்சுனா மீளப்பெற வேண்டிவந்தது. ஆனாலும் அது தற்செயலானதாகவே கருதப்பட்டது.
அர்ச்சுனாவை மிகச்சிலர் ஆரம்பத்திலேயே சந்தேகத்துடன் பார்த்தனர். அர்ச்சுனாவும் ஒரு மருத்துவராகையால் மருத்துவ வட்டத்துக்குள் இவர் நன்கு அறியப்பட்டு இருந்தார். அவர்கள் மத்தியிலிருந்து கடுமையான விமர்சனங்கள் வந்தன. அவ்வாறு விமர்சனத்தை வைத்தவர்களில் என்னுடைய சகோதரனும் ஒருவர் ஆவார். ஆனால் அவரும் ஒரு மருத்துவர் என்பதால் மருத்துவத்துறைக்கு எதிராக ஊழல்களை அம்பலப்படுத்துவதால் இந்த டொக்டர்மார் எல்லாம் குழம்புகின்றார்கள் என்று அவர்களின் கருத்துக்களை அதன் கண்டு கொள்ளவில்லை.
அதன்பின் அர்ச்சுனாவின் அரசியல் பிரவேச முன்முயற்சிகள் அர்ச்சுனாவின் குறளி வித்தைகளை தேசம்நெற் ஆங்காங்கே வெளிப்படுத்தியது. அர்ச்சுனா அரசியலுக்குள் குதித்து ஊசி அர்ச்சுனாவாக மாறியபோது அர்ச்சுனாவின் சாயம் வெளுத்து உண்மைத் தோற்றம் வெளிப்படத் தொடங்கிவிட்டது.
‘நான் விரல் நீட்டியவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்’ என அன்று அர்ச்சுனா எனக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். அதுவே அர்ச்சுனா ஒரு கற்பனையில் வாழும் உள்ளடக்கமற்ற மனிதன் என்ற எண்ணத்தை எனக்குள் தோற்றுவித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் இந்த வார்த்தையைச் சொல்லியிருக்கலாம். ஆனால் அதனை சொல்லக் கூடிய தகுதியில் இருந்த அவர் ஒருபோதும் அதனைச் சொன்னதாக நான் அறியவில்லை. நேற்றைய மழையில் இன்று முளைத்த நச்சுக்காளான் அர்ச்சுனா “நான் விரல் நீட்டியவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்’’ என்பது உளவியல் சார்ந்த உயர்வுச் சிக்கல் மனநிலை என புரிந்து கொள்ள வேண்டும்.
அர்ச்சுனா சாவகச்சேரி வைத்தியசாலை விடயத்தை எடுத்தது முதல் அவர் செய்கின்ற அனைத்து விடயங்களுமே தன்னை ஒரு பேசுபொருளாக அதாவது கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும் செத்த வீட்டில் பிணமாகவும் இருக்க வேண்டும் என்று கருதும் அற்ரென்ஞ்ன் சீக்கிங் (attention seeking) மனநிலை தற்போது அவர் யார் என்பதைப் பெரும்பாலானவர்கள் உணர்ந்துள்ளனர்.
அர்ச்சுனா பொதுவெளியில் வெளிநாட்டில கக்கூஸ் கழுவிறதை சரியா கழுவுங்கோ, இவள் விபச்சாரி, அவள் விபச்சாரி, நீ என்ன படித்தாய் என்றெல்லாம் மற்றவர்களின் கல்விநிலையை, தொழிலை, அவர்களின் பிரதேசங்களை சமூகத்தை கொச்சைப்படுத்தும் உயர்வுச் சிக்கல் கொண்ட மனநிலையுடையவர். அதேபோல் தன்னைப் பற்றி: நான் 3 கம்பஸில் படித்தன், நான் யாழ்ப்பாணத்தான், நான் தமிழன், நான் சைவன் என்று தன் சைவ வெள்ளாள ஆணாதிக்க மனநிலையை வெளிப்படுத்தத் தயங்குவதில்லை.
குறிப்பாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை அவருடைய மலையகப் பின்னணியை மிகக் கீழ்த்தரமாக கைநாட்டு, எழுதப்படிக்கத் தெரியாதவர், கப்பலில் கூலியாக வந்தவர் என்றெல்லாம் விமர்சித்துள்ளார். இவ்வாறான மிக ஆபத்தான வக்கிர மனநிலைகொண்டவராக அர்ச்சுனா உள்ளார்.
அர்ச்சுனாவின் இந்த வக்கிர மனநிலையை தொலை தூரத்திலிருந்து இருந்து பார்ப்பவர்களுக்கே எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்குகின்றது. அதேநேரம் அர்ச்சுனாவுடன் நான்கு ஆண்டுகள் குடும்பம் நடத்திய அவருடைய முதலாவது மனைவியின் நான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கையைச் சிந்தித்துப் பாருங்கள்.
“நீ யாரையடி மனதில் வைத்திருக்கிறாய், எத்தனை பேரோடு சுத்தினாய், எத்தினை பேரோடு படுத்தாய், நீ விபச்சாரி, …” என்றெல்லாம் அர்ச்சுனா தன்னுடைய மனைவியை கொடுமைப்படுத்தியதாகவும் எப்போதும் சந்தேகப்பட்டு வன்முறையில் இறங்குவதாகவும், அர்ச்சுனாவின் முன்னால் மனைவியின் கனடாவில் வாழும் சினேகிதி தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அந்தச் சினேகிதி நான்கு ஆண்டுகள் நீடித்த இவர்களுடைய திருமணம் நரகமாக அமைந்ததாக விபரிக்கின்றார். இவ்வாறு தான் கட்டிய மனைவியைச் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்திய ஒரு கொடூரன் ‘புலிகளையும் மாவீரர்களையும் பிரபாகரனையும்’ போர்த்திக்கொண்டு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது, தமிழ் பெண்களுக்கே சாபக் கேடு என அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
ரிக்ரொக் சாளினி, ஊடகவியலாளர் சங்கவி, சட்டத்தரணி சுவஸ்திகா ஆகியோரை விபச்சாரி என்று பாராளுமன்றத்திலும் பொதுவெளியிலும் சொல்கின்ற மனநிலை திடீரென வரவில்லை என்று தெரிவிக்கும் அர்ச்சுனாவின் முன்னாள் மனைவியின் சினேகிதி. இந்த வசையாடல்களை நான்கு ஆண்டுகள் அனுபவித்து இதற்கு அப்பால் தன்னால் முடியாது என்ற நிலையிலேயே அர்ச்சுனாவின் முன்னாள் மனைவி விவாகரத்துச் செய்துகொண்டார்.
அர்ச்சுனாவின் முதல் மனைவி தொடர்பில் கருத்துத் தெரிவித்த இதேமாதிரிப் பாதிக்கப்பட்ட முக்கிய பொறுப்பில் உள்ளவரின் மகளும் தன்னுடைய கதையை தேசம்நெற்றிடம் பகிர்ந்து கொண்டார். அந்தப் பெண் தான் காதலித்து திருமணம் செய்தவன் , திருமணத்திற்குப் பின் சந்தேகபுத்திகொண்டு தன் மீது வீட்டு வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாகவும் குறிப்பிட்டார். வன்முறையின் உச்ச கட்டமாக தன்னை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்தாகவும் தெரிவித்தார். இறுதியில் தலைகீழாகக் கட்டி கட்டையால் முகத்தில் அடித்து கடுமையாக காயமடைந்துள்ளார். இதற்குமேல் தாங்க முடியாது என்ற நிலையில் தான் விவாகரத்துப் பெற்றதாகவும் அந்தப் பெண் தன்னுடைய கண்ணீர் கதையை பகிர்ந்து கொண்டார் . அத்துடன் அர்ச்சுனாவின் முன்னாள் மனைவி எவ்வாறான துன்பங்களை அனுபவித்திருப்பார் என்பது என் கண்முன்னால் காட்சிகளாக நகருவதாக அவர் தெரிவித்தார். இந்த சந்தேக மனநிலையுடய ஆண்களோடு வாழுவது என்பது ஒரு வெறிகொண்ட மிருகத்தோடு குடும்பம் நடத்துவதற்குச் சரியென்கிறார் அப்பெண். இவ்வாறான வெறிகொண்ட சில நூற்றுக்கணக்கானோரிடம் எங்கள் பிள்ளைகள், சகோதரிகள், உறவுகள் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர்.
இவர்கள் கொக்குவில் பகுதியில் வாழ்ந்த வீட்டுக்கு அருகில் குடியிருந்தவர், வடமாகாண சபையில் முக்கிய உறுப்பினராக இருந்த ஒருவர். அவர் தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் பொழுதுபட்டால் அர்ச்சுனா வீட்டிலிருந்து பெரும்பாலும் பெரிய சத்தங்கள் வரும். ஒரே அடிபிடியாகவே இருக்கும். பாவம் அந்தப் பொம்பிளைப் பிள்ளை. இவன் வலம்புரியில் அந்த ரைவர் ஏதோ கொழுவிட்டான் என்று அடித்து நொருக்கின மாதிரித்தான் அந்தப் பிள்ளையின் நிலைமையும். இவன்கள் தான் இப்ப யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என வருத்தப்பட்டார் அவர்.
இந்த ஆணாதிக்க சக்திகளுக்கு எதிராக குரல் எழுப்பினால், ஊழல் ஒழிப்பு அணி வன்னி பெண்களின் நிர்வாணப் படங்களைப் பதிவேற்றும். அர்ச்சுனாவுக்கு எதிராக அர்ச்சுனா செய்த கொடுமைகளை அவருடைய முன்னாள் மனைவியோ மற்றும் இவரால் பாதிக்கப்பட்ட பெண்களோ வெளிக்கொண்டுவந்தால் அப்பெண்கள் சமூகவலைத்தளத்தில் நிர்வாணமாக்கப்படுவார்கள்.
அடுத்ததாக அர்ச்சுனாவின் இரண்டாவது மனைவி சிங்களப் பெண்ணுக்கு என்ன நடந்தது என்பதே தெரியவில்லை. சாவகச்சேரி வைத்தியசாலைப் பிரச்சினையின் சமயம் தான் சிங்களப் பெண்ணை திருமணம் செய்திருப்பதாக ஊடகங்களில் தெரிவித்திருத்தார். ஆனால் இதுவரை அந்த இரண்டாவது மனைவி யார் ? அவருக்கு என்ன நடந்தது என்பதே மர்மமாக உள்ளது. இந்த வரிசையில் கடைசியாக நிர்வாணமாக்கப்பட்டவர் கௌசல்யா நரேந்திரன். தற்போது அவர் மௌனிக்க வைக்கப்பட்டுள்ளார். அரசியலிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். ஏன் ? கௌசல்யா நரேந்திரனின் முன்னாள் காதலன் சிறந்த சதுரங்க விளையாட்டுக்காரர். அவர் கிளிநொச்சியில் சதுரங்க கழகங்களை உருவாக்கி மாணவர்களுக்கு சதுரங்கம் பழக்குவதுடன் இந்தியா போன்ற நாடுகளுக்குப் பயணித்து மாணவர்களை அத்துறையில் வளர்த்து வருகின்றார். கௌசல்யாவுக்கும் அவருடைய காதலனுக்கும் உள்ள உறவில் பொறாமைகொண்டு அதற்குள் தலையிட்டு தங்கை என்று கூறியவளை நான் கட்டுவேன் என்று சொல்லி அந்த உறவை முடிவுக்கு கொண்டு வந்தவர் அர்ச்சுனா. தற்போது கௌசல்யாவையும் முகவரியற்றவர் ஆக்கிவிட்டார். தங்கம் என்று சொன்னவளை தங்கச் சங்கிலி போட்டுக் கட்டி வைத்துள்ளார் அர்ச்சுனா.
அதே ஆணாதிக்க ஆண்கள் சமூகத்தைச் சேர்ந்த எம்பி சிவஞானம் சிறிதரன் அர்ச்சுனாவின் கேவலமான பேச்சுக்களை பாராளுமன்றம் தடை செய்யக்கூடாது எனக் கோருகின்றார். எம்பி பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அர்ச்சுனாவை தனது கட்சிக்குள் வரவேற்பதாகக் கூறுகின்றார். தமிழ் பெண்கள் விழித்துக்கொண்டு இந்த ஆணாதிக்க வெறியர்களுக்கு எதிராக தங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.
SHARE