ற்றவாளிகளை தண்டிக்க ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

310

குற்றவாளிகளை தண்டிக்க ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் – வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு வேண்டுதல் – புங்குடுதீவு பள்ளி மாணவி வித்தியாவை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்தவர்களுக்கு அரபுநாடுகளில் அமுலில் உள்ள இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்து கடும் தண்டனை வழங்குவதன் மூலம் இலங்கையில் பெருகிவரும் குற்றச்செயல்களை ஒழிக்க முடியும் என வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது, உண்மையில், பள்ளி மாணவி வித்தியாவின் படுகொலையானது மனித நேயம் மிக்க எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத படுபாதகச் செயலாகும். இதுபோன்ற பல்வேறு வன்செயல்கள் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கில் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. இலங்கையில் அதிகரித்துவரும் இவ்வாறான குற்றச்செயல்கள் பல்லின சமூகம் வாழும் சூழலில் மாபெரும் கலாசார சீரழிவை அதிகரிக்கச் செய்துள்ளது. வடக்கில் அதிக அளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ள போதிலும் பல்வேறு காவல் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்து அதிகரித்துவரும் குற்றச்செயல்களை குறைக்கமுடியாத கையறு நிலை காணப்படுகிறது. அதாவது தனி மனிதனின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப் படாமையோடு உயிருக்கும் உத்தரவாதமற்ற நிலையே காணப்படுகிறது. எனவே, வித்தியாவின் படுகொலை போன்ற அதிகரித்து வருகின்ற பெருங் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்துவதற்கும் தண்டனை வழங்குவதற்குமான மூலோபாயமாக முஸ்லிம் ஷரியா சட்டத்தை அமுல்படுத்துவதே ஒரே வழியாகும் என்று வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு தனது அறிக்கையில் வலியுத்தியுள்ளது.

 

SHARE