வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியாவில் கடையடைப்பு- கொலைகாரக் கும்பளை தூக்கிலிடுங்கள் மக்கள் ஆவேசம்.
இன்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் யாழ்.புங்குடுதீவு மாணவி காட்டுமிராண்டித் தனமாக கூட்டு வன்புறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வவுனியா மாவட்ட மக்கள் உணர்வுபூர்வமாக தமது எதிர்ப்பலைகளை தெரிவித்திருந்தனர். இதன்போது பிரதேச செயலகத்திற்கு முன்பாக கூடிய மக்கள் கோஷங்களை எழுப்பியவாறு காணப்பட்டனர். மக்கள் அணிதிரண்டு வவுனியா நீதிமன்றத்தின் முன்பாக தமது கோஷங்களை ஏழுப்பயிருந்த இடத்தில் அங்கு பொலிஸர் குவிக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவேண்டாம் என எச்சரித்திருந்தனர். பொலிஸாரின் எச்சரிப்புக்கு மத்தியிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை விடவில்லை.
வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியாவில் கடையடைப்பு- கொலைகாரக் கும்பளை தூக்கிலிடுங்கள் மக்கள் ஆவேசம்.
Posted by Thinappuyalnews on Thursday, May 21, 2015
மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதையும், வவுனியா எங்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதையும் கானொளிகளிலும், படங்களிலும் காணலாம்.
வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து வவுனியாவில் கடையடைப்பு- கொலைகாரக் கும்பலை தூக்கிலிடுங்கள் மக்கள் ஆவேசம்.part-2
Posted by Thinappuyalnews on Thursday, May 21, 2015