ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேனவின் மறைவால் வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, அடுத்த அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற வீரசேன கமகே நியமிக்கப்பட உள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச்.நந்தசேன காலமானார்.
69 ஆவது வயதான எச்.நந்தசேன அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலம் வடமத்திய மாகாண சபையின் அமைச்சராகப் பணியாற்றிய அவர் 2020 ஆம் ஆண்டு முதல் முறையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவானார்.