ஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையினைத் தொடர்ந்து இந்நிறுவனம் சரிவைக் காண மைக்ரோசொப்ட் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை வாங்கியிருந்தது.
எனினும் மீண்டும் பிரிந்த நோக்கியா நிறுவனம் நான் தான் கைப்பேசி உலகின் அரசன் என்பதை மீண்டும் நிரூபிக்க அன்ரோயிட் கைப்பேசிகளை அறிமுகம் செய்ய தயாராகியுள்ளது.
இந்நிலையில் ஆரம்ப காலங்களில் அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றிருந்து Nokia 3310 கைப்பேசியினை புதிய வடிவமைப்புடன் மீண்டும் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அறிவித்திருந்தது.
அறிவிப்புக்கு ஏற்ப தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் Mobile World Congress நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இக்கைப்பேசி 2G வலையமைப்பில் தொழில்படக்கூடியதாக இருப்பதுடன் குரல் வழி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளை பரிமாறுதல் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
எனினும் இணையத்தளம் மற்றும் ஈ-மெயில் வசதிகள் தரப்படவில்லை.
2.4 அங்குல வளைந்த திரையினைக் கொண்டுள்ள இக் கைப்பேசியில் 16GB சேமிப்பு நினைவகம் தரப்பட்டுள்ளதுடன், microSD கார்ட்டின் உதவியுடன் 32GB வரை அதிகரிக்கக்கூடிய வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் 48 யூரோக்கள் மட்டுமே பெறுமதியினைக் கொண்டுள்ள இக் கைப்பேசியானது Grey, Dark Blue, Warm Red மற்றும் Yellow ஆகிய வர்ணங்களில் கிடைக்கின்றது.