6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதல்

413

இந்தியா– பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி தொடர் அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் தெரிவித்துள்ளார்.

மும்பையில் 2008ம் ஆண்டு தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான நேரடி கிரிக்கெட் போட்டி தொடரை இந்தியா ரத்து செய்தது.

இதனையடுத்து கடந்த 6 ஆண்டாக இரு நாட்டு அணிகளும் எந்த டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் இந்தியா–பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி தொடர் அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா–பாகிஸ்தான் இடையே 2022ம் ஆண்டு வரை 6 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் 2 வாரங்களுக்கு இந்தியா சென்று வந்தார். இதனையடுத்து அடுத்த ஆண்டு முதல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் இரு நாடுகள் இடையே முதல் தொடர் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE