சென்னை வீராங்கனை ஹரினி மகளிர் செஸ் போட்டியில் வெற்றி

426

சென்னை,நவ.29 (டி.என்.எஸ்) ரேச்சல் பரஞ்சோதி நினைவு மகளிர் செஸ் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் நேற்று தொடங்கியது. போட்டியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பொதுமேலாளர் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

முன்னாள் சர்வதேச மாஸ்டர் மனுவேல் ஆரோன், கல்லூரி முதல்வர் நிர்மலா, துணை முதல்வர் மணிமேகலை, தமிழ்நாடு செஸ் சங்க செயலாளர் ஹரிகரன், உதவி பொருளாளர் திருக்காளத்தி உள்பட பலர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

9 சுற்று கொண்ட இந்த போட்டி நாளை வரை நடக்கிறது. நேற்று 3 சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. 3-வது சுற்றில் சென்னை வீராங்கனை ஹரினி (3 புள்ளிகள்), பூர்ணஸ்ரீயை (2 புள்ளிகள்) தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் சுபலட்சுமி (2 புள்ளிகள்), பால கண்ணம்மாவிடம் தோல்வி அடைந்தார்.

 

SHARE