போர்க்குற்றம் தொடர்பிலான உள்ளூர் விசாரணையில் ஐ.நா உள்வாங்கப்படமாட்டாது – ஜனாதிபதி

317
போர்க்குற்றம் தொடர்பான இலங்கையின் உள்ளக விசாரணையின்போது ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்கள் உள்வாங்கப்படமாட்டார்கள் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் அவர்களின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய ஒரு மாதத்துக்குள் குழுவை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சர்வதேச அழுத்தத்தின்கீழ் அதில் ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்கள் உள்வாங்கப்படமாட்டார்கள் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிபிசி சிங்கள சேவையிடம் இந்தக்கருத்துக்களை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

குறித்த விசாரணைக்குழு பக்கச்சார்பற்ற வகையில் அமைக்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்பவுள்ளதாகவும் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

SHARE