முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994 – 2005 வரை ஜனாதிபதியாக செயற்பட்டவர்.
இவர் டுபாயில் நடைபெற்று வரும் கல்வி மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பிரித்தானிய ஊடகத்திற்கு அளித்துள்ள விசேட செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா,
தமது நாடு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சர்வதேச விசாரணை நடத்துவதை இலங்கை மக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் அவமானமாக கருதுவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் சர்வதேச விசாரணையை முழு நாடும் எதிர்ப்பதாகவும் உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடுவதை அவமானமாக கருதுவதாகவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
பி.பி.சி செய்தி சேவை போர்க்குற்ற ஆதாரங்கள் தொடர்பான காட்சிகளை நம்பவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள கருத்து தொடர்பில் சந்திரிக்காவிடம் வினவிய போது,
அதற்கு பதிலளித்தவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறாக புரிந்துக் கொண்டுள்ளார் என்றும் ஆவணத் தயாரிப்பாளர்கள் ஆதாரத்தை காண்பிக்கும் போது விசாரணையாளர்களிடம் ஆவணங்கள் கையளிக்கப்பட வேண்டும்.
ஆவணங்கள் முன்வைக்கப்பட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை பார்வையிட முடியும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.